1
|
{நீதிமான்களின் வாழ்க்கை} [PS] ஒருவனும் பின்தொடராமல் இருந்தும் துன்மார்க்கர்கள் ஓடிப்போகிறார்கள்; [QBR] நீதிமான்களோ சிங்கத்தைப்போல தைரியமாக இருக்கிறார்கள். [QBR] |
2
|
தேசத்தின் பாவத்தினால் அதின் அதிகாரிகள் அநேகராக இருக்கிறார்கள்; [QBR] புத்தியும் அறிவுமுள்ள மனிதனாலோ அதின் நற்சீர் நீடித்திருக்கும். [QBR] |
3
|
ஏழைகளை ஒடுக்குகிற தரித்திரன் [QBR] உணவு விளையாதபடி வெள்ளமாக அடித்துக்கொண்டுபோகிற மழையைப்போல இருக்கிறான். [QBR] |
4
|
வேதப்பிரமாணத்தைவிட்டு விலகுகிறவர்கள் [QBR] துன்மார்க்கர்களைப் புகழுகிறார்கள்; [QBR] வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவர்களோ அவர்களோடு போராடுகிறார்கள். [QBR] |
5
|
துன்மார்க்கர்கள் நியாயத்தை அறியார்கள்; [QBR] யெகோவாவை தேடுகிறவர்களோ அனைத்தையும் அறிவார்கள். [QBR] |
6
|
இருவழிகளில் நடக்கிறவன் செல்வந்தனாக இருந்தாலும், [QBR] நேர்மையாக நடக்கிற தரித்திரன் அவனைவிட சிறப்பானவன். [QBR] |
7
|
வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள மகன்; [QBR] உணவுப்பிரியர்களுக்குத் தோழனாக இருக்கிறவனோ [QBR] தன்னுடைய தகப்பனை அவமானப்படுத்துகிறான். [QBR] |
8
|
அநியாய வட்டியினாலும் ஆதாயத்தினாலும் தன்னுடைய சொத்தைப் பெருகச்செய்கிறவன், [QBR] தரித்திரர்கள்மேல் இரங்குகிறவனுக்காக அதைச் சேகரிக்கிறான். [QBR] |
9
|
வேதத்தைக் கேட்காதபடி தன்னுடைய செவியை விலக்குகிறவனுடைய [QBR] ஜெபமும் அருவருப்பானது. [QBR] |
10
|
உத்தமர்களை மோசப்படுத்தி, [QBR] பொல்லாத வழியிலே நடத்துகிறவன் தான் வெட்டின குழியில் தானே விழுவான்; [QBR] உத்தமர்களோ நன்மையைச் சுதந்தரிப்பார்கள். [QBR] |
11
|
செல்வந்தன் தன்னுடைய பார்வைக்கு ஞானவான்; [QBR] புத்தியுள்ள தரித்திரனோ அவனைப் பரிசோதிக்கிறான். [QBR] |
12
|
நீதிமான்கள் களிகூரும்போது மகா கொண்டாட்டம் உண்டாகும்; [QBR] துன்மார்க்கர்கள் எழும்பும்போதோ மனிதர்கள் மறைந்துகொள்கிறார்கள். [QBR] |
13
|
தன்னுடைய பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; [QBR] அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம்பெறுவான். [QBR] |
14
|
எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்; [QBR] தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனோ தீங்கில் விழுவான். [QBR] |
15
|
ஏழை மக்களை ஆளும் துன்மார்க்க அதிகாரி [QBR] கெர்ச்சிக்கும் சிங்கத்திற்கும் அலைந்து திரிகிற கரடிக்கும் ஒப்பாக இருக்கிறான். [QBR] |
16
|
தலைவன் புத்தியீனனாக இருந்தால் அவன் செய்யும் இடுக்கண் மிகுதி; [QBR] பொருளாசையை வெறுக்கிறவன் தீர்க்காயுசைப் பெறுவான். [QBR] |
17
|
இரத்தப்பழிக்காக ஒடுக்கப்பட்டவன் குழியில் ஒளிய ஓடிவந்தால், [QBR] அவனை ஆதரிக்கவேண்டாம். [QBR] |
18
|
உத்தமனாக நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்; [QBR] மாறுபாடான இருவழியில் நடக்கிறவனோ அவற்றில் ஒன்றிலே விழுவான். [QBR] |
19
|
தன்னுடைய நிலத்தைப் பயிரிடுகிறவன் உணவால் திருப்தியாவான்; [QBR] வீணர்களைப் பின்பற்றுகிறவனோ வறுமையால் நிறைந்திருப்பான். [QBR] |
20
|
உண்மையுள்ள மனிதன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; [QBR] செல்வந்தனாகிறதற்கு அவசரப்படுகிறவனோ ஆக்கினைக்குத் தப்பமாட்டான். [QBR] |
21
|
பாரபட்சம் நல்லதல்ல, [QBR] பாரபட்சமுள்ளவன் ஒரு துண்டு அப்பத்திற்காக அநியாயம் செய்வான். [QBR] |
22
|
பொறாமைக்காரன் செல்வனாகிறதற்குப் பதறுகிறான், [QBR] வறுமை தனக்கு வருமென்று அறியாமல் இருக்கிறான். [QBR] |
23
|
தன்னுடைய நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைவிட, [QBR] கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான். [QBR] |
24
|
தன்னுடைய தகப்பனையும் தன்னுடைய தாயையும் கொள்ளையிட்டு, [QBR] அது துரோகமல்ல என்பவன் பாழாக்குகிற மனிதனுக்குத் தோழன். [QBR] |
25
|
பெருநெஞ்சன் வழக்கை உண்டாக்குகிறான்; [QBR] யெகோவாவை நம்புகிறவனோ செழிப்பான். [QBR] |
26
|
தன்னுடைய இருதயத்தை நம்புகிறவன் மூடன்; [QBR] ஞானமாக நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான். [QBR] |
27
|
தரித்திரர்களுக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையமாட்டான்; [QBR] தன்னுடைய கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள் வரும். [QBR] |
28
|
துன்மார்க்கர்கள் எழும்பும்போது மனிதர்கள் மறைந்துகொள்கிறார்கள்; [QBR] அவர்கள் அழியும்போதோ நீதிமான்கள் பெருகுகிறார்கள். [PE] |
Proverbs 28:1 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...