Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Proverbs Chapters

Proverbs 26 Verses

1 {மதியீனன்} [PS] கோடைக்காலத்திலே உறைந்த பனியும், [QBR] அறுப்புக்காலத்திலே மழையும் தகாததுபோல, [QBR] மூடனுக்கு மகிமை தகாது. [QBR]
2 அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலவும், [QBR] தகைவிலான் குருவி பறந்து போவதுபோலவும், [QBR] காரணம் இல்லாமல் சொன்னசாபம் தங்காது. [QBR]
3 குதிரைக்குச் சவுக்கும், கழுதைக்குக் கடிவாளமும், [QBR] மூடனுடைய முதுகுக்குப் பிரம்பும் ஏற்றது. [QBR]
4 மூடனுக்கு அவனுடைய மதியீனத்தின்படி மறுஉத்திரவு கொடுக்காதே; [QBR] கொடுத்தால் நீயும் அவனைப்போல ஆவாய். [QBR]
5 மூடனுக்கு அவனுடைய மதியீனத்தின்படி மறுஉத்திரவு கொடு; [QBR] கொடுக்காவிட்டால் அவன் தன்னுடைய பார்வைக்கு ஞானியாக இருப்பான். [QBR]
6 மூடன் கையிலே செய்தி அனுப்புகிறவன் [QBR] தன்னுடைய கால்களையே வெட்டிக்கொண்டு நஷ்டத்தை அடைகிறான். [QBR]
7 நொண்டியின் கால்கள் குந்திக்குந்தி நடக்கும், [QBR] அப்படியே மூடர்களின் வாயிலுள்ள உவமைச்சொல்லும் குந்தும். [QBR]
8 மூடனுக்கு மரியாதை கொடுக்கிறவன் கவணிலே கல்லைக்கட்டுகிறவன்போல் இருப்பான். [QBR]
9 மூடன் வாயில் அகப்பட்ட பழமொழி [QBR] வெறியன் கையில் அகப்பட்ட முள். [QBR]
10 பலத்தவன் அனைவரையும் நோகச்செய்து, [QBR] மூடனையும் வேலைவாங்குகிறான், [QBR] மீறி நடக்கிறவர்களையும் வேலைவாங்குகிறான். [QBR]
11 நாயானது தான் கக்கினதை சாப்பிடும்படித் திரும்புவதுபோல, [QBR] மூடனும் தன்னுடைய மூடத்தனத்திற்குத் திரும்புகிறான். [QBR]
12 தன்னுடைய பார்வைக்கு ஞானியாக இருப்பவனைக் கண்டால், [QBR] அவனைவிட மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாக இருக்கலாம். [QBR]
13 வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான். [QBR]
14 கதவு கீல்முளையில் ஆடுகிறதுபோல, [QBR] சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான். [QBR]
15 சோம்பேறி தன்னுடைய கையைக் கலத்திலே வைத்து [QBR] அதைத் தன்னுடைய வாய்க்குத் திரும்ப எடுக்க வருத்தப்படுகிறான். [QBR]
16 புத்தியுள்ள மறுஉத்திரவு சொல்லத்தகும் ஏழுபேரைவிட [QBR] சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன். [QBR]
17 வழியிலே போகும்போது தனக்கு சம்மந்தமில்லாத வழக்கில் தலையிடுகிறவன் [QBR] நாயைக் காதைப் பிடித்து இழுக்கிறவனைப்போல இருக்கிறான். [QBR]
18 கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ, [QBR]
19 அப்படியே, தன்னோடு இருந்தவனை வஞ்சித்து: [QBR] நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன் [QBR] என்று சொல்லுகிற மனிதனும் இருக்கிறான். [QBR]
20 விறகில்லாமல் நெருப்பு அணையும்; [QBR] கோள்சொல்லுகிறவன் இல்லாமல் சண்டை அடங்கும். [QBR]
21 கரிகள் தழலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல, [QBR] கோபக்காரன் சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன். [QBR]
22 கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போல இருக்கும்; [QBR] ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் குத்தும். [QBR]
23 நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம் [QBR] வெள்ளிப்பூச்சு பூசிய ஓட்டைப்போல இருக்கும். [QBR]
24 பகைஞன் தன்னுடைய உள்ளத்தில் கபடத்தை மறைத்து, [QBR] தன்னுடைய உதடுகளினால் சூதுபேசுகிறான். [QBR]
25 அவன் தாழ்மையாக பேசினாலும் அவனை நம்பாதே; [QBR] அவனுடைய இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு. [QBR]
26 பகையை வஞ்சகமாக மறைத்து வைக்கிறவன் எவனோ, [QBR] அவனுடைய பொல்லாங்கு மகா சபையிலே வெளிப்படுத்தப்படும். [QBR]
27 படுகுழியை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான்; [QBR] கல்லைப் புரட்டுகிறவன்மேல் அந்தக் கல் திரும்ப விழும். [QBR]
28 பொய்நாவு தன்னால் பாதிக்கப்பட்டவர்களைப் பகைக்கும்; [QBR] முகஸ்துதி பேசும் வாய் அழிவை உண்டாக்கும். [PE]
×

Alert

×