Indian Language Bible Word Collections
Proverbs 2:9
Proverbs Chapters
Proverbs 2 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Books
Old Testament
New Testament
Proverbs Chapters
Proverbs 2 Verses
1
|
{ஞானத்தின் நற்பலன்கள்} [PS] என் மகனே, நீ உன்னுடைய செவியை ஞானத்திற்குச் சாய்த்து, [QBR] உன்னுடைய இருதயத்தைப் புத்திக்கு அமையச்செய்வதற்காக, [QBR] |
2
|
நீ என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, [QBR] என்னுடைய கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி, [QBR] |
3
|
ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து, [QBR] |
4
|
அதை வெள்ளியைப்போல் நாடி, [QBR] புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடினால், [QBR] |
5
|
அப்பொழுது யெகோவாவுக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, [QBR] தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய். [QBR] |
6
|
யெகோவா ஞானத்தைத் தருகிறார்; [QBR] அவருடைய வாயிலிருந்து அறிவும் புத்தியும் வரும். [QBR] |
7
|
அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞானத்தை வைத்திருக்கிறார்; [QBR] உத்தமமாக நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாக இருக்கிறார். [QBR] |
8
|
அவர் நியாயத்தின் வழிகளைத் தற்காத்து, [QBR] தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார். [QBR] |
9
|
அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், [QBR] எல்லா நல்வழிகளையும் அறிந்துகொள்வாய். [QBR] |
10
|
ஞானம் உன்னுடைய இருதயத்தில் நுழைந்து, [QBR] அறிவு உன்னுடைய ஆத்துமாவுக்கு இன்பமாக இருக்கும்போது, [QBR] |
11
|
நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், [QBR] புத்தி உன்னைப் பாதுகாக்கும். [QBR] |
12
|
அதினால் நீ துன்மார்க்கர்களுடைய வழிக்கும், [QBR] மாறுபாடு பேசுகிற மனிதனுக்கும், [QBR] |
13
|
இருளான வழிகளில் நடக்க நீதிநெறிகளைவிட்டு, [QBR] |
14
|
தீமைசெய்ய மகிழ்ந்து, துன்மார்க்கர்களுடைய மாறுபாடுகளில் களிகூருகிறவர்களுக்கும், [QBR] |
15
|
மாறுபாடான பாதைகளிலும் கோணலான வழிகளிலும் நடக்கிறவர்களுக்கும் [QBR] நீ தப்புவிக்கப்படுவாய். [QBR] |
16
|
தன்னுடைய இளவயதின் நாயகனை விட்டு, [QBR] தன்னுடைய தேவனுடைய உடன்படிக்கையை மறந்து, [QBR] |
17
|
ஆசை வார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய ஒழுங்கீனமானவளுக்கும் தப்புவிக்கப்படுவாய். [QBR] |
18
|
அவளுடைய வீடு மரணத்திற்கும், [QBR] அவளுடைய பாதைகள் மரித்தவர்களிடத்திற்கும் சாய்கிறது. [QBR] |
19
|
அவளிடத்தில் போகிறவர்களில் ஒருவரும் திரும்புகிறதில்லை, [QBR] வாழ்வின்பாதைகளில் வந்து சேருகிறதுமில்லை. [QBR] |
20
|
ஆதலால் நீ நல்லவர்களின் வழியிலே நடந்து, [QBR] நீதிமான்களின் பாதைகளைக் காத்துக்கொள். [QBR] |
21
|
நன்மை செய்கிறவர்கள் பூமியிலே தங்குவார்கள்; [QBR] உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள். [QBR] |
22
|
துன்மார்க்கர்களோ பூமியிலிருந்து துண்டிக்கப்பட்டுபோவார்கள்; [QBR] துரோகிகள் அதில் இல்லாதபடி அழிவார்கள். [PE] |