Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Proverbs Chapters

Proverbs 15 Verses

1 {வாழ்வின் ஒழுங்குமுறைகள்} [PS] சாந்தமான பதில் கடுங்கோபத்தை அடக்கும்; [QBR] கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.
2 ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; [QBR] மூடர்களின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும். [QBR]
3 யெகோவாவின் கண்கள் எந்த இடத்திலுமிருந்து, [QBR] நல்லவர்களையும், தீயவர்களையும் நோக்கிப்பார்க்கிறது. [QBR]
4 ஆரோக்கியமுள்ள நாவு ஜீவமரம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும். [QBR]
5 மூடன் தன்னுடைய தகப்பனுடைய புத்தியை அலட்சியப்படுத்துகிறான்; [QBR] கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி. [QBR]
6 நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷம் உண்டு; [QBR] துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பம் உண்டு. [QBR]
7 ஞானிகளின் உதடுகள் அறிவை விதைக்கும்; [QBR] மூடர்களின் இருதயமோ அப்படியல்ல. [QBR]
8 துன்மார்க்கர்களுடைய பலி யெகோவாவுக்கு அருவருப்பானது; [QBR] செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம். [QBR]
9 துன்மார்க்கர்களுடைய வழி யெகோவாவுக்கு அருவருப்பானது; [QBR] நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார். [QBR]
10 வழியைவிட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி எரிச்சலாக இருக்கும்; [QBR] கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான். [QBR]
11 பாதாளமும் அழிவும் யெகோவாவின் பார்வைக்கு முன்பாக இருக்க, [QBR] மனுமக்களுடைய இருதயம் அதிகமாக அவர் முன்பாக இருக்குமல்லவோ? [QBR]
12 பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசிக்கமாட்டான்; [QBR] ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான். [QBR]
13 மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; [QBR] மனதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோகும். [QBR]
14 புத்திமானுடைய மனம் அறிவைத்தேடும்; [QBR] மூடர்களின் வாயோ மதியீனத்தை மேயும். [QBR]
15 சிறுமைப்பட்டவனுடைய நாட்களெல்லாம் தீங்குள்ளவைகள்; [QBR] மனரம்மியமோ நிரந்தர விருந்து. [QBR]
16 சஞ்சலத்தோடு கூடிய அதிகப் பொருட்களைவிட, [QBR] யெகோவாவைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம். [QBR]
17 பகையோடு இருக்கும் கொழுத்த எருதின் கறியைவிட, [QBR] சிநேகத்தோடு இருக்கும் இலைக்கறியே நல்லது. [QBR]
18 கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; [QBR] நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான். [QBR]
19 சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமம்; [QBR] நீதிமானுடைய வழியோ ராஜபாதை. [QBR]
20 ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; [QBR] மதியற்ற மனிதனோ தன்னுடைய தாயை அலட்சியப்படுத்துகிறான். [QBR]
21 மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்; [QBR] புத்திமானோ தன்னுடைய செயல்களைச் செம்மைப்படுத்துகிறான். [QBR]
22 ஆலோசனை இல்லாததால் எண்ணங்கள் சிதைந்துபோகும்; [QBR] ஆலோசனைக்காரர்கள் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும். [QBR]
23 மனிதனுக்குத் தன்னுடைய வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; [QBR] ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது! [QBR]
24 கீழான பாதாளத்தைவிட்டு விலகும்படி, [QBR] விவேகிக்கு வாழ்வின் வழியானது உன்னதத்தை நோக்கும் வழியாகும். [QBR]
25 அகங்காரியின் வீட்டைக் யெகோவா பிடுங்கிப்போடுவார்; [QBR] விதவையின் எல்லையையோ நிலைப்படுத்துவார். [QBR]
26 துன்மார்க்கர்களுடைய நினைவுகள் [QBR] யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்; [QBR] சுத்தமானவர்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள். [QBR]
27 பொருளாசைக்காரன் தன்னுடைய வீட்டைக் கலைக்கிறான்; [QBR] லஞ்சங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான். [QBR]
28 நீதிமானுடைய மனம் பதில் சொல்ல யோசிக்கும்; [QBR] துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும். [QBR]
29 துன்மார்க்கர்களுக்குக் யெகோவா தூரமாக இருக்கிறார்; [QBR] நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார். [QBR]
30 கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்; [QBR] நற்செய்தி எலும்புகளை ஆரோக்கியமாக்கும். [QBR]
31 வாழ்வுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது [QBR] ஞானிகளிடத்திலே தங்கும். [QBR]
32 புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை வெறுக்கிறான்; [QBR] கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான். [QBR]
33 யெகோவாவுக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; [QBR] மேன்மைக்கு முன்னானது தாழ்மை. [PE]
×

Alert

×