Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Proverbs Chapters

Proverbs 14 Verses

1 {விவேகமும் அலட்சியமும்} [PS] புத்தியுள்ள பெண் தன்னுடைய வீட்டைக் கட்டுகிறாள்; [QBR] புத்தியில்லாத பெண்ணோ தன்னுடைய கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள். [QBR]
2 நிதானமாக நடக்கிறவன் யெகோவாவுக்குப் பயப்படுகிறான்; [QBR] தன்னுடைய வழிகளில் தாறுமாறானவனோ அவரை அலட்சியம்செய்கிறான். [QBR]
3 மூடன் வாயிலே அவனுடைய அகந்தைக்கு ஏற்ற கோல் உண்டு; [QBR] ஞானவான்களின் உதடுகளோ அவர்களைக் காப்பாற்றும். [QBR]
4 எருதுகள் இல்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாக இருக்கும்; [QBR] காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு. [QBR]
5 மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லமாட்டான்; [QBR] பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான். [QBR]
6 பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடிக்கமாட்டான்; [QBR] புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாகவரும். [QBR]
7 மூடனுடைய முகத்தைவிட்டு விலகிப்போ; [QBR] அறிவுள்ள உதடுகளை அங்கே காணமாட்டாய். [QBR]
8 தன்னுடைய வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்; [QBR] மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம். [QBR]
9 மூடர்கள் பாவத்தைக்குறித்துப் பரியாசம்செய்கிறார்கள்; [QBR] நீதிமான்களுக்குள்ளே தயவு உண்டு. [QBR]
10 இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்; [QBR] அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தை ஆகமாட்டான். [QBR]
11 துன்மார்க்கனுடைய வீடு அழியும்; [QBR] செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும். [QBR]
12 மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழி உண்டு; [QBR] அதின் முடிவோ மரணவழிகள். [QBR]
13 சிரிப்பிலும் மனதிற்குத் துக்கமுண்டு; [QBR] அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம். [QBR]
14 பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன்னுடைய வழிகளிலேயும், [QBR] நல்ல மனிதனோ தன்னிலே தானும் திருப்தியடைவான். [QBR]
15 பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; [QBR] விவேகியோ தன்னுடைய நடையின்மேல் கவனமாக இருக்கிறான். [QBR]
16 ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்; [QBR] மதியீனனோ கடுங்கோபம்கொண்டு துணிகரமாக இருக்கிறான். [QBR]
17 முன்கோபி மதிகேட்டைச் செய்வான்; [QBR] கெட்டச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான். [QBR]
18 பேதையர்கள் புத்தியீனத்தைச் சுதந்தரிக்கிறார்கள்; [QBR] விவேகிகளோ அறிவினால் முடிசூட்டப்படுகிறார்கள். [QBR]
19 தீயோர்கள் நல்லவர்களுக்கு முன்பாகவும், துன்மார்க்கர்கள் நீதிமான்களுடைய வாசற்படிகளிலும் குனிவதுண்டு. [QBR]
20 தரித்திரன் தன்னைச் சேர்ந்தவனாலும் பகைக்கப்படுகிறான்; [QBR] செல்வந்தனுக்கோ அநேக நண்பர்கள் உண்டு. [QBR]
21 பிறனை அவமதிக்கிறவன் பாவம்செய்கிறான்; [QBR] தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான். [QBR]
22 தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? [QBR] நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமும் உண்டு. [QBR]
23 எல்லா உழைப்பினாலும் பயனுண்டு; [QBR] உதடுகளின் பேச்சோ வறுமையை மட்டும் தரும். [QBR]
24 ஞானிகளுக்கு முடி அவர்களுடைய செல்வம்; [QBR] மூடர்களின் மதியீனம் மூடத்தனமே. [QBR]
25 மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களைக் காப்பாற்றுகிறான்; [QBR] வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான். [QBR]
26 யெகோவாவுக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; [QBR] அவனுடைய பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும். [QBR]
27 யெகோவாவுக்குப் பயப்படுதல் வாழ்வு தரும் ஊற்று; [QBR] அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம். [QBR]
28 மக்கள் கூட்டம் ராஜாவின் மகிமை; [QBR] மக்கள்குறைவு தலைவனின் முறிவு.
29 நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; [QBR] முன்கோபியோ புத்தியீனத்தை விளங்கச்செய்கிறான். [QBR]
30 சமாதானத்துடன் இருப்பது உடலுக்கு வாழ்வு; [QBR] பொறாமையோ எலும்புருக்கி. [QBR]
31 தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; [QBR] தரித்திரனுக்குத் தயவு செய்கிறவனோ அவரை மேன்மைப்படுத்துகிறான்; [QBR]
32 துன்மார்க்கன் தன்னுடைய தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; [QBR] நீதிமானோ தன்னுடைய மரணத்திலே நம்பிக்கையுள்ளவன். [QBR]
33 புத்திமானுடைய இருதயத்தில் ஞானம் தங்கும்; மதியீனர்களிடத்தில் உள்ளதோ வெளிப்படும். [QBR]
34 நீதி மக்களை உயர்த்தும்; பாவமோ எந்த மக்களுக்கும் இகழ்ச்சி. [QBR]
35 ராஜாவின் தயவு விவேகமுள்ள பணிவிடைக்காரன்மேல் இருக்கும்; [QBR] அவனுடைய கோபமோ அவமானத்தை உண்டாக்குகிறவன்மேல் இருக்கும். [PE]
×

Alert

×