Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Proverbs Chapters

Proverbs 12 Verses

1 {ஞானியின் செயல்கள்} [PS] புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்; [QBR] கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருககுணமுள்ளவன். [QBR]
2 நல்லவன் யெகோவாவிடத்தில் தயவு பெறுவான்; [QBR] கெட்டசிந்தனைகளுள்ள மனிதனை அவர் தண்டனைக்கு உட்படுத்துவார். [QBR]
3 துன்மார்க்கத்தினால் மனிதன் நிலைவரப்படமாட்டான்; [QBR] நீதிமான்களுடைய வேரோ அசையாது. [QBR]
4 குணசாலியான பெண் தன்னுடைய கணவனுக்கு கிரீடமாக இருக்கிறாள்; [QBR] அவமானத்தை உண்டாக்குகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாக இருக்கிறாள். [QBR]
5 நீதிமான்களுடைய நினைவுகள் நியாயமானவைகள்; [QBR] துன்மார்க்கர்களுடைய ஆலோசனைகளோ வஞ்சனையுள்ளவைகள். [QBR]
6 துன்மார்க்கர்களின் வார்த்தைகள் இரத்தம் சிந்த மறைந்திருப்பதைப்பற்றியது; [QBR] உத்தமர்களுடைய வாயோ அவர்களைத் தப்புவிக்கும். [QBR]
7 துன்மார்க்கர்கள் கவிழ்க்கப்பட்டு ஒழிந்துபோவார்கள்; [QBR] நீதிமான்களுடைய வீடோ நிலைநிற்கும். [QBR]
8 தன்னுடைய புத்திக்குத் தகுந்தபடி மனிதன் புகழப்படுவான்; [QBR] மாறுபாடான இருதயமுள்ளவனோ இகழப்படுவான். [QBR]
9 உணவில்லாதவனாக இருந்தும், [QBR] தன்னைத்தான் மேன்மைப்படுத்துகிறவனைவிட, [QBR] மேன்மை இல்லாதவனாக இருந்தும் பணிவிடைக்காரனுள்ளவன் உத்தமன். [QBR]
10 நீதிமான் தன்னுடைய மிருகஜீவன்களைக் காப்பாற்றுகிறான்; [QBR] துன்மார்க்கர்களுடைய இரக்கமும் கொடுமையே. [QBR]
11 தன்னுடைய நிலத்தைப் பயிரிடுகிறவன் உணவினால் திருப்தியடைவான்; [QBR] வீணர்களைப் பின்பற்றுகிறவனோ மதியற்றவன். [QBR]
12 துன்மார்க்கன் கெட்டவர்களுடைய வலையை விரும்புகிறான்; [QBR] நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும். [QBR]
13 துன்மார்க்கனுக்கு அவனுடைய உதடுகளின் துரோகமே கண்ணி; [QBR] நீதிமானோ நெருக்கத்திலிருந்து நீங்குவான். [QBR]
14 அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்; [QBR] அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும். [QBR]
15 மதியீனனுடைய வழி அவனுடைய பார்வைக்குச் செம்மையாக இருக்கும்; [QBR] ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன். [QBR]
16 மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்; [QBR] அவமானத்தை மூடுகிறவனோ விவேகி. [QBR]
17 சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்; [QBR] பொய்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான். [QBR]
18 பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; [QBR] ஞானமுள்ளவர்களுடைய நாவோ மருந்து. [QBR]
19 சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; [QBR] பொய்நாவோ ஒரு நிமிடம்மாத்திரம் இருக்கும்; [QBR]
20 தீங்கை திட்டமிடுகிறவர்களின் இருதயத்தில் கபடம் இருக்கிறது; [QBR] சமாதானம்செய்கிற ஆலோசனைக்காரர்களுக்கு உள்ளது சந்தோஷம். [QBR]
21 நீதிமானுக்கு ஒரு கேடும் வராது; [QBR] துன்மார்க்கர்களோ தீமையினால் நிறையப்படுவார்கள். [QBR]
22 பொய் உதடுகள் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்; [QBR] உண்மையாக நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம். [QBR]
23 விவேகமுள்ள மனிதன் அறிவை அடக்கிவைக்கிறான்; [QBR] மூடர்களுடைய இருதயமோ மதியீனத்தைப் பிரபலப்படுத்தும். [QBR]
24 ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகை செய்யும்; [QBR] சோம்பேறியோ கட்டாயமாக வேலை வாங்கப்படுவான். [QBR]
25 மனிதனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; [QBR] நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும். [QBR]
26 நீதிமான் தன்னுடைய அயலானைவிட மேன்மையுள்ளவன்; [QBR] துன்மார்க்கர்களுடைய வழியோ அவர்களை மோசப்படுத்தும். [QBR]
27 சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை; [QBR] ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது. [QBR]
28 நீதியின் பாதையில் வாழ்வு உண்டு; [QBR] அந்தப் பாதையில் மரணம் இல்லை. [PE]
×

Alert

×