Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Proverbs Chapters

Proverbs 11 Verses

1 {நீதியின் பயன்கள்} [PS] கள்ளத்தராசு யெகோவாவுக்கு அருவருப்பானது; [QBR] சரியான நிறைகல்லோ அவருக்குப் பிரியம். [QBR]
2 அகந்தை வந்தால் அவமானமும் வரும்; [QBR] தாழ்ந்த சிந்தை உள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு. [QBR]
3 செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்; [QBR] துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும். [QBR]
4 கோபாக்கினை நாளில் செல்வம் உதவாது; [QBR] நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும். [QBR]
5 உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்; [QBR] துன்மார்க்கனோ தன்னுடைய துன்மார்க்கத்தினால் விழுவான். [QBR]
6 செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத் தப்புவிக்கும்; [QBR] துரோகிகளோ தங்களுடைய தீவினையிலே பிடிபடுவார்கள். [QBR]
7 துன்மார்க்கன் மரணமடையும்போது அவனுடைய நம்பிக்கை அழியும்; [QBR] அக்கிரமக்காரர்களின் எதிர்பார்ப்பு கெட்டுப்போகும். [QBR]
8 நீதிமான் இக்கட்டிலிருந்து விடுவிக்கப்படுவான்; [QBR] அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான். [QBR]
9 மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்; [QBR] நீதிமானோ அறிவினால் தப்புகிறான். [QBR]
10 நீதிமான்கள் நன்றாக இருந்தால் பட்டணம் சந்தோஷமாக இருக்கும்; [QBR] துன்மார்க்கர்கள் அழிந்தால் கெம்பீரம் உண்டாகும். [QBR]
11 செம்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தினால் பட்டணம் நிலைபெற்று ஓங்கும்; [QBR] துன்மார்க்கர்களுடைய வாயினால் அது இடிந்துவிழும். [QBR]
12 மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்; [QBR] புத்திமானோ தன்னுடைய வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான். [QBR]
13 புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; [QBR] ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான். [QBR]
14 ஆலோசனையில்லாத இடத்தில் மக்கள் விழுந்துபோவார்கள்; [QBR] அநேக ஆலோசனைக்காரர்கள் உண்டானால் சுகம் உண்டாகும். [QBR]
15 அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் மிகுந்த பாடுபடுவான்; [QBR] பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாக இருப்பான். [QBR]
16 நல்லொழுக்கமுள்ள பெண் மானத்தைக் காப்பாள்; [QBR] பலசாலிகள் செல்வத்தைக் காப்பார்கள். [QBR]
17 தயவுள்ள மனிதன் தன்னுடைய ஆத்துமாவுக்கு நன்மை செய்துகொள்ளுகிறான்; [QBR] கொடூரனோ தன்னுடைய உடலை அலைக்கழிக்கிறான். [QBR]
18 துன்மார்க்கன் வீண்வேலையைச் செய்கிறான்; [QBR] நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான். [QBR]
19 நீதி வாழ்வுக்கு ஏதுவாகிறதுபோல, [QBR] தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்திற்கு ஏதுவாகிறான். [QBR]
20 மாறுபாடுள்ள இருதயமுடையவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்; [QBR] உத்தம வழியில் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியமானவர்கள். [QBR]
21 கையோடு கைகோர்த்தாலும், கெட்டவன் தண்டனைக்குத் தப்பான்; [QBR] நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும். [QBR]
22 மதிகேடாக நடக்கிற அழகுள்ள பெண், [QBR] பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமம். [QBR]
23 நீதிமான்களுடைய ஆசை நன்மையே; [QBR] துன்மார்க்கர்களுடைய நம்பிக்கையோ கோபத்தின் தண்டனையாக முடியும். [QBR]
24 வாரி இறைத்தும் விருத்தியடைந்தவர்களும் உண்டு; [QBR] அதிகமாக தனக்கென்று மட்டும் வைத்துக்கொண்டும் [QBR] வறுமையடைபவர்களும் உண்டு. [QBR]
25 உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; [QBR] எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும். [QBR]
26 தானியத்தைக் கட்டிவைக்கிறவனை மக்கள் சபிப்பார்கள்; [QBR] விற்கிறவனுடைய தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும். [QBR]
27 நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்; [QBR] தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும். [QBR]
28 தன்னுடைய செல்வத்தை நம்புகிறவன் விழுவான்; [QBR] நீதிமான்களோ துளிரைப்போல தழைப்பார்கள். [QBR]
29 தன்னுடைய வீட்டைக் கலைக்கிறவன் காற்றைச் சுதந்தரிப்பான்; [QBR] மூடன் ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான். [QBR]
30 நீதிமானுடைய பலன் ஜீவமரம்; [QBR] ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன். [QBR]
31 இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே; துன்மார்க்கனுக்கும் [QBR] பாவிக்கும் எத்தனை அதிகம். [PE]
×

Alert

×