யூதா மக்கள் உபத்திரவப்படவும், கொடுமையான அடிமை வேலைசெய்யவும் [QBR] சிறைப்பட்டுப்போனார்கள். அவள் அந்நிய மக்களுக்குள்ளே தங்குகிறாள், [QBR] இளைப்பாறுதல் அடையமாட்டாள்; [QBR] அவளைத் துன்பப்படுத்துகிற அனைவரும் [QBR] அவளை அவளுடைய இக்கட்டான நேரங்களிலே தொடர்ந்துபிடித்தார்கள். [QBR]
வழியில் நடந்துபோகிற அனைத்து மக்களே, [QBR] இதைக்குறித்து உங்களுக்குக் கவலையில்லையா? [QBR] யெகோவா தாம் மிகவும் கோபப்பட்ட நாளிலே என்னை வருத்தப்படுத்தியதால் [QBR] எனக்கு ஏற்பட்ட என் துக்கத்திற்குச் சரியான துக்கம் உண்டோ என்று என்னை நோக்கிப்பாருங்கள். [QBR]
உயரத்திலிருந்து என் எலும்புகளில் அக்கினியை அனுப்பினார், [QBR] அது அவைகளில் பற்றியெரிகிறது; [QBR] என் கால்களுக்கு வலையை வீசினார்; [QBR] என்னைப் பின்னிட்டு விழச்செய்தார்; என்னைப் பாழாக்கினார்; [QBR] தினமும் நான் பெலவீனப்பட்டுப்போகிறேன். [QBR]
என் மீறுதல்களின் நுகம் அவருடைய கையால் பூட்டப்பட்டிருக்கிறது; [QBR] அவைகள் பிணைக்கப்பட்டு என் கழுத்தைச் சுற்றிக்கொண்டது; [QBR] என் பெலனை இழக்கச்செய்தார்; [QBR] நான் எழுந்திருக்க முடியாதபடி ஆண்டவர் என்னை ஒடுக்குகிறவர்களின் கையில் ஒப்புக்கொடுத்தார். [QBR]
இவைகளுக்காக நான் அழுகிறேன்; என் கண், [QBR] என் கண்ணே கண்ணீரை சிந்துகிறது; [QBR] என் உயிரைக் காப்பாற்றித் தேற்றுகிறவர்கள் என்னைவிட்டு விலகினார்கள்; [QBR] பகைவன் மேற்கொண்டதினால் என் பிள்ளைகள் பாழாய்ப்போனார்கள். [QBR]
யெகோவா நீதிபரர்; [QBR] அவருடைய கட்டளைகளுக்கு விரோதமாக நான் எழும்பினேன்; [QBR] மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேட்டு என் துக்கத்தைப் பாருங்கள்; [QBR] என்னுடைய இளம்பெண்களும், வாலிபர்களும் சிறைப்பட்டுப்போனார்கள். [QBR]
என்னைச் சிநேகித்தவர்களைக் கூப்பிட்டேன், [QBR] அவர்களோ எனக்கு துரோகம் செய்தார்கள்; [QBR] என் ஆசாரியர்களும் என் மூப்பர்களும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத் [QBR] தங்களுக்கு ஆகாரம் தேடும்போது நகரத்தில் மூச்சு அடங்கி இறந்துபோனார்கள். [QBR]
யெகோவாவே, பாரும், நான் நெருக்கப்படுகிறேன்; [QBR] என் குடல் கொதிக்கிறது; நான் மிகவும் துரோகம் செய்ததினால் என் இருதயம் வேதனைப்படுகிறது; [QBR] வெளியிலே பட்டயம் என்னைப் பிள்ளையற்றவளாக்கியது, வீட்டுக்குள்ளே மரணம் வந்திருக்கிறது. [QBR]
நான் தவிக்கிறதை அவர்கள் கேட்டாலும் என்னைத் தேற்றுபவர்கள் ஒருவரும் இல்லை; [QBR] என் பகைவர்கள் எல்லோரும் எனக்கு வந்த ஆபத்தைக் கேட்டு, [QBR] தேவரீர் அதைச் செய்ததினால் சந்தோஷமாயிருக்கிறார்கள்; [QBR] நீர் சொன்ன நாளை வரச்செய்வீர். அப்பொழுது அவர்களும் என்னைப்போலாவார்கள். [QBR]
அவர்களுடைய பொல்லாப்பெல்லாம் உமது முகத்திற்கு முன்பாக வரட்டும். [QBR] என்னுடைய சகல பாவங்களுக்காக நீர் எனக்குச் செய்ததுபோல அவர்களுக்கும் செய்யும்; [QBR] என் பெருமூச்சுகள் மிகுதியாயின, [QBR] என் இருதயம் பலவீனமாயிருக்கிறது. [PE]