Indian Language Bible Word Collections
Job 8:19
Job Chapters
Job 8 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Books
Old Testament
New Testament
Job Chapters
Job 8 Verses
1
|
{பில்தாதின் வார்த்தைகள்} [PS] அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக: [QBR] |
2
|
“நீர் எதுவரைக்கும் இப்படிப்பட்டவைகளைப் பேசுவீர்? [QBR] எதுவரைக்கும் உம்முடைய வாயின் வார்த்தைகள் பலமான காற்றைப்போலிருக்கும்? [QBR] |
3
|
தேவன் நியாயத்தைப் புரட்டுவாரோ? [QBR] சர்வவல்லமையுள்ள தேவன் நீதியைப் புரட்டுவாரோ? [QBR] |
4
|
உம்முடைய பிள்ளைகள் அவருக்கு விரோதமாகப் பாவம் செய்திருந்தாலும் [QBR] அவர்களுடைய பாவத்தின் தண்டனைக்கு அவர்களை அவர் ஒப்புக்கொடுத்திருந்தாலும், [QBR] |
5
|
நீர் தேவனை ஏற்கனவே தேடி, [QBR] சர்வவல்லமையுள்ள தேவனை நோக்கி விண்ணப்பம்செய்து, [QBR] |
6
|
சுத்தமும் செம்மையுமாய் இருந்தீர் என்றால், [QBR] அப்பொழுது அவர் உமக்காக விழித்து நீதியுள்ள உம்முடைய குடியிருக்கும் இடத்தை செழிப்புள்ளதாக்குவார். [QBR] |
7
|
உம்முடைய ஆரம்பம் சாதாரணமாயிருந்தாலும், [QBR] உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும். [QBR] |
8
|
ஆகையால், நீர் முந்தின தலைமுறையாரிடத்தில் விசாரித்து, [QBR] அவர்கள் முன்னோர்களின் செய்தியை ஆராய்ந்துபாரும். [QBR] |
9
|
நாம் நேற்று உண்டானவர்கள், ஒன்றும் அறியோம்; [QBR] பூமியின்மேல் நம்முடைய நாட்கள் நிழலைப்போலிருக்கிறது. [QBR] |
10
|
அவர்கள் உமக்கு போதித்து, உமக்குத் தெரிவித்து, [QBR] தங்கள் இருதயத்திலிருக்கும் நியாயங்களை வெளிப்படுத்துவார்கள் அல்லவோ? [QBR] |
11
|
சேறில்லாமல் நாணல் ஓங்கி வளருமோ? [QBR] தண்ணீரில்லாமல் கோரைப்புல் முளைக்குமோ? [QBR] |
12
|
அது இன்னும் பச்சையாயிருக்கும்போதே, [QBR] அறுக்கப்படாதிருந்தும் மற்ற எந்தப் புல்லைவிட சீக்கிரமாக வாடிப்போகும் அல்லவோ? [QBR] |
13
|
தேவனை மறக்கிற எல்லோருடைய வழிகளும் அப்படியே இருக்கும்; [QBR] மாயக்காரரின் நம்பிக்கை அழிந்துபோகும். [QBR] |
14
|
அவனுடைய வீண் எண்ணம் வீணாகப்போய், [QBR] அவனுடைய நம்பிக்கை சிலந்திப்பூச்சியின் வீடுபோலிருக்கும். [QBR] |
15
|
ஒருவன் அதின் வீட்டின்மேல் விழுந்தால், [QBR] அது நிலைக்காது, அதைப் பிடித்தால், அது நிற்காது. [QBR] |
16
|
வெயில் எரிக்காததற்கு முன்னே அவன் பச்சைச்செடி, [QBR] அதின் கொடிகள் அவனுடைய தோட்டத்தின்மேலே படரும்; [QBR] |
17
|
அதின் வேர்கள் கற்குவியலில் சிக்கி, [QBR] கற்பாறையை நாடும். [QBR] |
18
|
அது அதினிடத்தில் இல்லாமல் அழிந்தபின், [QBR] அது இருந்த இடம் உன்னை நான் பார்த்ததில்லையென்று மறுதலிக்கும். [QBR] |
19
|
இதோ, அவனுடைய வழியின் மகிழ்ச்சி இப்படியே போகிறது; [QBR] ஆனாலும் வேறே ஆட்கள் அந்த இடத்திலிருந்து எழும்புவார்கள். [QBR] |
20
|
இதோ, தேவன் உத்தமனை வெறுக்கிறதுமில்லை, [QBR] பொல்லாதவர்களுக்குக் கைகொடுக்கிறதுமில்லை. [QBR] |
21
|
இனி அவர் உம்முடைய வாயைச் சிரிப்பினாலும், [QBR] உம்முடைய உதடுகளைக் கெம்பீரத்தினாலும் நிரப்புவார். [QBR] |
22
|
உம்மைப் பகைக்கிறவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள்; [QBR] துன்மார்க்கருடைய கூடாரம் அழிந்துபோகும்” என்றான். [PE] |