Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Job Chapters

Job 38 Verses

1 {யெகோவாவின் வார்த்தைகள்} [PS] அப்பொழுது யெகோவா: பெருங்காற்றிலிருந்து யோபுக்கு மறுமொழியாக: [QBR]
2 “அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை இருளாக்குகிற இவன் யார்? [QBR]
3 இப்போதும் மனிதனைப்போல் ஆடையைக்கட்டிக்கொள்; [QBR] நான் உன்னைக் கேட்பேன்; [QBR] நீ எனக்குப் பதில் சொல் [QBR]
4 நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? [QBR] நீ அறிவாளியானால் அதைச் சொல். [QBR]
5 அதற்கு அளவு குறித்தவர் யார்? [QBR] அதின்மேல் நூல்போட்டவர் யார்? [QBR] இதை நீ அறிந்திருந்தால் சொல். [QBR]
6 அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? [QBR] அதின் மூலைக்கல்லை வைத்தவர் யார்? [QBR]
7 அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஒன்றாகப்பாடி, [QBR] தேவமகன்கள் எல்லோரும் கெம்பீரித்தார்களே. [QBR]
8 கர்ப்பத்திலிருந்து பிறக்கிறதுபோல் கடல் புரண்டுவந்தபோது, [QBR] அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்? [QBR]
9 மேகத்தை அதற்கு ஆடையாகவும், இருளை அதற்குப் புடவையாகவும் நான் உடுத்தினபோதும், [QBR]
10 நான் அதற்கு எல்லையைக் குறித்து, [QBR] அதற்குத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் போட்டு: [QBR]
11 இதுவரை வா, மீறி வராதே; [QBR] உன் அலைகளின் பெருமை இங்கே அடங்குவதாக என்று நான் சொல்லுகிறபோதும் நீ எங்கேயிருந்தாய்? [QBR]
12 தீயவர்கள் பூமியிலிருந்து அகற்றிப்போடுவதற்காக, [QBR] அதின் கடைசி எல்லைகளைப் பிடிக்க, [QBR]
13 உன் வாழ்நாளிலே எப்போதாவது நீ அதிகாலைக்குக் கட்டளை கொடுத்து, [QBR] சூரிய உதயத்திற்கு அதின் இடத்தைக் காண்பித்ததுண்டோ? [QBR]
14 பூமி முத்திரையிடப்பட்ட களிமண்போல வேறே தோற்றம்கொள்ளும்; [QBR] அனைத்தும் ஆடை அணிந்திருக்கிறதுபோலக் காணப்படும். [QBR]
15 துன்மார்க்கரின் ஒளி அவர்களைவிட்டு எடுபடும்; [QBR] மேட்டிமையான கை முறிக்கப்படும்.
16 நீ சமுத்திரத்தின் அடித்தளங்கள்வரை புகுந்து, ஆழத்தின் அடியில் உலாவினதுண்டோ? [QBR]
17 மரணவாசல்கள் உனக்குத் திறந்ததுண்டோ? [QBR] மரண இருளின் வாசல்களை நீ பார்த்ததுண்டோ? [QBR]
18 நீ பூமியின் விசாலங்களை ஆராய்ந்து அறிந்ததுண்டோ? [QBR] இவைகளையெல்லாம் நீ அறிந்திருந்தால் சொல். [QBR]
19 வெளிச்சம் வாசமாயிருக்கும் இடத்திற்கு வழியெங்கே? [QBR] இருள் குடிகொண்டிருக்கும் இடமெங்கே? [QBR]
20 அதின் எல்லை இன்னதென்று உனக்குத் தெரியுமோ? [QBR] அதின் வீட்டிற்குப்போகிற பாதையை அறிந்திருக்கிறாயோ? [QBR]
21 நீ அதை அறியும்படி அப்போது பிறந்திருந்தாயோ? [QBR] உன் நாட்களின் எண்ணிக்கை அவ்வளவு பெரிதோ? [QBR]
22 உறைந்த மழையின் கிடங்குகளுக்குள் நீ நுழைந்தாயோ? [QBR] கல்மழையிலிருக்கிற கிடங்குகளைப் பார்த்தாயோ? [QBR]
23 ஆபத்துவரும் காலத்திலும், கலகமும் போரும் வரும் காலத்திலும், [QBR] பயன்படுத்த நான் அவைகளை வைத்துவைத்திருக்கிறேன். [QBR]
24 வெளிச்சம் பரப்புகிறதற்கும், கீழ்காற்று பூமியின்மேல் வீசுவதற்கான வழி எங்கே? [QBR]
25 பாழும் வெட்டவெளியுமான தரையைத் திருப்தியாக்கி, [QBR] இளம்செடிகளின் முளைகளை முளைக்கவைப்பதற்கு, [QBR]
26 பூமியெங்கும் மனிதர் குடியில்லாத இடத்திலும், [QBR] மனிதநடமாட்டமில்லாத வனாந்திரத்திலும் மழையைப் பொழியச்செய்து, [QBR]
27 வெள்ளத்திற்கு நீர்க்கால்களையும், [QBR] இடிமுழக்கங்களுடன் வரும் மின்னலுக்கு வழிகளையும் பகுத்தவர் யார்? [QBR]
28 மழைக்கு ஒரு தகப்பனுண்டோ? பனித்துளிகளைப் பிறப்பித்தவர் யார்? [QBR]
29 உறைந்த தண்ணீர் யாருடைய வயிற்றிலிருந்து புறப்படுகிறது? [QBR] ஆகாயத்தின் உறைந்த பனியைப் பெற்றவர் யார்? [QBR]
30 தண்ணீர் பனிக்கட்டியாகி மறைந்து, [QBR] ஆழத்தின் முகம் கெட்டியாக உறைந்திருக்கிறதே. [QBR]
31 அறுமீன் நட்சத்திரத்தின் அழகின் ஒற்றுமையை நீ இணைக்கமுடியுமோ? [QBR] அல்லது விண்மீன் குழுவை கலைப்பாயோ? [QBR]
32 நட்சத்திரங்களை அதினதின் காலத்திலே வரவைப்பாயோ? [QBR] துருவமண்டலத்தின் நட்சத்திரத்தையும் அதைச் சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ? [QBR]
33 வானத்தின் அமைப்பை நீ அறிவாயோ? [QBR] அது பூமியை ஆளும் ஆளுகையை நீ திட்டமிடுவாயோ? [QBR]
34 ஏராளமான தண்ணீர் உன்மேல் பொழியவேண்டும் என்று [QBR] உன் சத்தத்தை மேகங்கள்வரை உயர்த்துவாயோ? [QBR]
35 நீ மின்னல்களை வரவழைத்து, [QBR] அவைகள் புறப்பட்டுவந்து: இதோ, [QBR] இங்கேயிருக்கிறோம் என்று உனக்குச் சொல்ல வைப்பாயோ? [QBR]
36 மறைவான இடத்தில் ஞானத்தை வைத்தவர் யார்? [QBR] உள்ளத்தில் புத்தியைக் கொடுத்தவர் யார்? [QBR]
37 ஞானத்தினாலே மேகங்களை எண்ணுபவர் யார்? [QBR]
38 தூசியானது பரவலாகவும், [QBR] மண்கட்டிகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளவும், [QBR] வானத்தின் மேகங்களிலுள்ள தண்ணீரைப் பொழியச்செய்கிறவர் யார்? [QBR]
39 நீ சிங்கத்திற்கு இரையை வேட்டையாடி, [QBR]
40 சிங்கக்குட்டிகள் தாங்கள் தங்கும் இடங்களிலே கிடந்து குகையில் பதுங்கியிருக்கிறபோது, [QBR] அவைகளின் ஆசையைத் திருப்தியாக்குவாயோ? [QBR]
41 காக்கைக்குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, [QBR] ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது, [QBR] அவைகளுக்கு இரையைச் சேகரித்துக் கொடுக்கிறவர் யார்? [PE]
×

Alert

×