Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Job Chapters

Job 37 Verses

1 “இதினால் என் இருதயம் தத்தளித்து, [QBR] தன்னிடத்தைவிட்டுத் தெறிக்கிறது. [QBR]
2 தேவனுடைய சத்தத்தினால் உண்டாகிற அதிர்ச்சியையும், [QBR] அவர் வாயிலிருந்து புறப்படுகிற முழக்கத்தையும் கவனமாகக் கேளுங்கள். [QBR]
3 அவர் வானத்தின் கீழெங்கும் அந்தத் தொனியையும், [QBR] பூமியின் கடையாந்தரங்கள்மேல் அதின் மின்னலையும் செல்லவிடுகிறார். [QBR]
4 அதற்குப்பின்பு அவர் சத்தமாக முழங்கி, [QBR] தம்முடைய மகத்துவத்தின் சத்தத்தைக் குமுறச்செய்கிறார்; [QBR] அவருடைய சத்தம் கேட்கப்படும்போது அதைத் தவிர்க்கமுடியாது. [QBR]
5 தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியவிதமாகக் குமுறச் செய்கிறார்; [QBR] நாம் விளங்கமுடியாத பெரிய காரியங்களை அவர் செய்கிறார். [QBR]
6 அவர் உறைந்த மழையையும், கல்மழையையும், [QBR] தம்முடைய வல்லமையின் பெருமழையையும் பார்த்து: [QBR] பூமியின்மேல் பெய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார். [QBR]
7 தாம் உண்டாக்கின எல்லா மனிதரும் தம்மை அறியவேண்டுமென்று, [QBR] அவர் எல்லா மனிதருடைய கைகளையும் முடக்கிப்போடுகிறார். [QBR]
8 அப்பொழுது காட்டுமிருகங்கள் தங்கள் குகைகளில் புகுந்து, [QBR] தங்கள் கெபிகளில் தங்கும். [QBR]
9 தெற்கேயிருந்து சூறாவளியும், [QBR] வடகாற்றினால் குளிரும் வரும். [QBR]
10 தம்முடைய சுவாசத்தினால் தேவன் குளிரைக் கொடுக்கிறார்; [QBR] அப்பொழுது தண்ணீரின் மேற்பரப்பு உறைந்துபோகும். [QBR]
11 அவர் நீர்த்துளிகளை மேகத்தில் ஏற்றி, [QBR] மின்னலினால் மேகத்தைச் சிதறவைக்கிறார். [QBR]
12 அவர் அவைகளுக்குக் கட்டளையிடுகிற யாவையும், [QBR] அவைகள் பூச்சக்கரத்தில் நடப்பிக்கும்படி, [QBR] அவர் அவைகளைத் தம்முடைய ஞான ஆலோசனைகளின்படியே சுற்றித் திரியவைக்கிறார். [QBR]
13 ஒன்றில் தண்டனையாகவும், ஒன்றில் தம்முடைய பூமிக்கு உபயோகமாகவும், [QBR] ஒன்றில் கிருபையாகவும், அவைகளை வரச்செய்கிறார். [QBR]
14 யோபே, இதற்குச் செவிகொடும்; [QBR] தரித்துநின்று தேவனுடைய ஆச்சரியமான கிரியைகளைத் தியானித்துப்பாரும். [QBR]
15 தேவன் அவைகளைத் திட்டமிட்டு, [QBR] தம்முடைய மேகத்தின் மின்னலை மின்னச்செய்யும் விதத்தை அறிவீரோ? [QBR]
16 மேகங்கள் தொங்கும்படி வைக்கும் எடையையும், [QBR] பூரண ஞானமுள்ளவரின் அற்புதமான செய்கைகளையும், [QBR]
17 தென்றலினால் அவர் பூமியை அமைக்கும்போது, [QBR] உம்முடைய ஆடைகள் வெப்பமாயிருக்கும் முறையையும் அறிவீரோ? [QBR]
18 செய்யப்பட்ட கண்ணாடியைப்போல் கெட்டியான ஆகாயமண்டலங்களை நீர் அவருடன் இருந்து விரித்தீரோ? [QBR]
19 அவருக்கு நாம் சொல்லக்கூடியதை எங்களுக்குப் போதியும்; [QBR] இருளின் காரணமாக முறைதவறிப் பேசுகிறோம். [QBR]
20 நான் பேசத்துணிந்தேன் என்று யாராவது ஒருவன் அவருக்கு முன்பாகச் சொல்லமுடியுமோ? [QBR] ஒருவன் பேசத்துணிந்தால் அவன் அழிக்கப்பட்டுப்போவானே. [QBR]
21 இப்போதும் காற்று வீசி ஆகாய மண்டலங்களிலுள்ள மப்பு நீங்கச் செய்திருக்கிற சமயத்தில் வடக்கேயிருந்து பொன்மயமான கதிர்கள் வருகிறபோது, [QBR]
22 ஆகாயமண்டலத்திலே பிரகாசிக்கிற சூரியனை முதலாய் ஒருவரும் நோக்கிப் பார்க்கமுடியாதே; [QBR] தேவனிடத்திலோ பயங்கரமான மகத்துவமுண்டு. [QBR]
23 சர்வவல்லமையுள்ள தேவனை நாம் கண்டுபிடிக்கமுடியாது; [QBR] அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர்; [QBR] அவர் மகா நீதிபரர்; [QBR] அவர் ஒடுக்கமாட்டார். [QBR]
24 ஆகையால் மனிதர் அவருக்குப் பயப்படவேண்டும்; [QBR] தங்கள் மனதில் ஞானிகளாயிருக்கிற எவர்களையும் அவர் மதிக்கமாட்டார்” என்றான். [PE]
×

Alert

×