2
|
“நான் பேசிமுடியும்வரை சற்றேபொறும்; [QBR] இன்னும் தேவனின் சார்பாக நான் சொல்லவேண்டிய நியாயங்களை உமக்குச் சொல்லிக் காண்பிப்பேன். [QBR] |
3
|
நான் தூரத்திலிருந்து என் ஞானத்தைக் கொண்டுவந்து, [QBR] என்னை உண்டாக்கினவருடைய நீதியை விளங்கச்செய்வேன். [QBR] |
4
|
மெய்யாகவே என் வார்த்தைகள் பொய்யில்லாமல் இருக்கும்; [QBR] உம்முடன் பேசுகிறவன் அறிவில் தேறினவன். [QBR] |
5
|
இதோ, தேவன் மகத்துவமுள்ளவர், அவர் ஒருவரையும் தள்ளிவிடமாட்டார்; [QBR] மன உருக்கத்திலும் அவர் மகத்துவமுள்ளவர். [QBR] |
6
|
அவர் துன்மார்க்கரைப் பிழைக்க விடாதிருக்கிறார்; [QBR] சிறுமையானவர்களின் நியாயத்தை விசாரிக்கிறார். [QBR] |
7
|
அவர் தம்முடைய கண்களை நீதிமான்களைவிட்டு விலக்காமல், [QBR] அவர்களை ராஜாக்களுடன் சிங்காசனத்தில் ஏறவும், [QBR] உயர்ந்த இடத்தில் என்றைக்கும் அமர்ந்திருக்கவும் செய்கிறார். [QBR] |
8
|
அவர்கள் விலங்குகள் போடப்பட்டு, [QBR] உபத்திரவத்தின் கயிறுகளால் கட்டப்பட்டிருந்தாலும், [QBR] |
9
|
அவர், அவர்களுடைய செயல்களையும், [QBR] அதிகமான அவர்களுடைய மீறுதல்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தி, [QBR] |
10
|
அக்கிரமத்தைவிட்டுத் திரும்பும்படி அவர்கள் காது கேட்க கடிந்துகொள்ளுகிறார். [QBR] |
11
|
அவர்கள் அடங்கி அவரை ஆராதித்தால், [QBR] தங்கள் நாட்களை நன்மையாகவும், [QBR] தங்கள் வருடங்களைச் செழிப்பான வாழ்வாகவும் போக்குவார்கள். [QBR] |
12
|
அடங்கவில்லை என்றால் பட்டயத்திற்கு இரையாகி, [QBR] ஞானம் அடையாமல் இறந்துபோவார்கள். [QBR] |
13
|
மாயமுள்ள இருதயத்தார் [* இருதயத்தில் விசுவசிக்காதவர்கள்] கோபத்தைக் குவித்துக்கொள்ளுகிறார்கள்; [QBR] அவர்களை அவர் கட்டிவைக்கும்போதும் தேவனைக் கெஞ்சிக் கூப்பிடுவதில்லை. [QBR] |
14
|
அவர்கள் இளவயதிலே இறந்துபோவார்கள்; [QBR] இழிவானவர்களுக்குள்ளே அவர்கள் இறப்பார்கள். [QBR] |
15
|
சிறுமைப்பட்டவர்களை அவர் சிறுமைக்கு விலக்கி, [QBR] அவர்கள் ஒடுக்கப்பட்டிருக்கும்போது அவர்கள் செவியைத் திறக்கிறார். [QBR] |
16
|
அப்படியே அவர் உம்மையும் நெருக்கத்திலிருந்து விலக்கி, [QBR] இடுக்கமில்லாத விசாலத்திலே வைப்பார்; [QBR] உம்முடைய உணவுப்பந்தி கொழுமையான பதார்த்தங்களால் நிறைந்திருக்கும். [QBR] |
17
|
ஆகாதவன்மேல் வரும் நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப் பார்ப்பீர்; [QBR] நியாயமும் நீதியும் உம்மை ஆதரிக்கும். [QBR] |
18
|
கடுங்கோபம் உண்டாயிருக்கிறதினால் [QBR] அவர் உம்மை ஒரு அடியினால் அழித்துவிடாமலிருக்க எச்சரிக்கையாயிரும்; [QBR] அப்பொழுது மீட்கும் பொருளை அதிகமாகக் கொடுத்தாலும் அதற்கு நீர் தப்பமாட்டீர். [QBR] |
19
|
உம்முடைய செல்வத்தை அவர் மதிப்பாரோ? [QBR] உம்முடைய பொன்னையும், பூரண பராக்கிரமத்தையும் அவர் மதிக்கமாட்டாரே. [QBR] |
20
|
மக்கள் தங்கள் இடத்தைவிட்டு அழிந்துபோகச்செய்கிற இரவை விரும்பாதிரும். [QBR] |
21
|
பாவத்தைத் திரும்பவும் செய்யாமல் எச்சரிக்கையாயிரும்; [QBR] உபத்திரவத்தைவிட அக்கிரமத்தைத் தெரிந்துகொண்டீரே. [QBR] |
22
|
இதோ, தேவன் தம்முடைய வல்லமையில் உயர்ந்திருக்கிறார்; [QBR] அவரைப் போல் போதிக்கிறவர் யார்? [QBR] |
23
|
அவருடைய வழியின் நியாயத்தை விசாரிக்கத்தகுந்தவன் யார்? [QBR] நீர் அநியாயம் செய்தீர் என்று சொல்லத்தக்கவன் யார்? [QBR] |
24
|
மனிதர் நோக்கிப்பார்க்கிற அவருடைய செயல்களை நீர் மகிமைப்படுத்த நினையும். [QBR] |
25
|
எல்லா மனிதரும் அதைக் காண்கிறார்களே; [QBR] தூரத்திலிருந்து அது மனிதருக்கு வெளிப்படுகிறது. [QBR] |
26
|
இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; [QBR] நாம் அவரை அறிய முடியாது; [QBR] அவருடைய வருடங்களின் தொகை எண்ணமுடியாதது. [QBR] |
27
|
அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறவைக்கிறார்; [QBR] அவைகள் மேகத்திலிருந்து மழையாக பொழிகிறது. [QBR] |
28
|
அதை மேகங்கள் பெய்து, மனிதர்கள் மேல் அதிகமாகப் பொழிகிறது. [QBR] |
29
|
மேகங்கள் பரவுகிறதையும், அவருடைய கூடாரத்திலிருந்து எழும்பும் குமுறல்களையும் அறியமுடியுமோ? [QBR] |
30
|
இதோ, அதின்மேல் தம்முடைய மின்னலின் ஒளியை பரப்புகிறார்; [QBR] சமுத்திரத்தை இருளால் மூடுகிறார். [QBR] |
31
|
அவைகளால் மக்களை தண்டிக்கிறவரும், [QBR] ஆகாரம்கொடுத்து காப்பாற்றுகிறவருமாயிருக்கிறார். [QBR] |
32
|
அவர் மின்னலின் ஒளியைத் தமது கைக்குள்ளே மூடி, [QBR] அது எவைகளையெல்லாம் அடிக்கவேண்டுமென்று கட்டளையிடுகிறார். [QBR] |
33
|
அதினால், அவர் செய்ய நினைக்கிறதையும், [QBR] புயல் எழும்பப்போகிறதையும், ஆடுமாடுகள் தெரியப்படுத்தும். [PE] |
Job 36:1 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...