Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Job Chapters

Job 33 Verses

1 “யோபே, என் நியாயங்களைக் கேளும்; [QBR] என் வார்த்தைகளுக்கெல்லாம் செவிகொடும். [QBR]
2 இதோ, என் வாயை இப்போது திறந்தேன்; [QBR] என் வாயிலிருக்கிற என் நாவானது பேசும். [QBR]
3 என் வார்த்தைகள் என் இருதயத்தின் உண்மைக்கு ஒத்திருக்கும்; [QBR] நான் அறிந்ததை என் உதடுகள் சுத்தமாக பேசும். [QBR]
4 தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார்; [QBR] சர்வவல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர்கொடுத்தது. [QBR]
5 உம்மால் முடிந்தால் எனக்கு மறுமொழி கொடும்; [QBR] நீர் ஆயத்தப்பட்டு எனக்கு முன்பாக நில்லும். [QBR]
6 இதோ, உம்மைப்போல நானும் தேவனால் உண்டானவன்; [QBR] நானும் மண்ணினால் உருவாக்கப்பட்டவன். [QBR]
7 இதோ, நீர் எனக்குப் பயப்பட்டுக் கலங்கத் தேவையில்லை; [QBR] என் கை உம்மேல் பாரமாயிருக்காது. [QBR]
8 நான் என் காதாலே கேட்க நீர் சொன்னதும், [QBR] நான் கேள்விப்பட்ட உம்முடைய வார்த்தைகளின் சத்தமும் என்னவென்றால்: [QBR]
9 நான் மீறுதல் இல்லாத சுத்தமுள்ளவன், [QBR] நான் குற்றமற்றவன், என்னில் பாவமில்லை. [QBR]
10 இதோ, என்னில் அவர் குற்றம் கண்டுபிடிக்கப்பார்க்கிறார், [QBR] என்னைத் தமக்கு எதிரியாக நினைத்துக்கொள்ளுகிறார். [QBR]
11 அவர் என் கால்களைத் தொழுவத்திலே அடைத்து, [QBR] என் நடைகளையெல்லாம் காவல் வைக்கிறார் என்று சொன்னீர். [QBR]
12 இதிலே நீர் நீதியுள்ளவர் அல்லவென்று உமக்கு மறுமொழியாகச் சொல்லுகிறேன்; [QBR] மனிதனைவிட தேவன் பெரியவராயிருக்கிறார். [QBR]
13 அவர் தம்முடைய செயல்கள் எல்லாவற்றையும் குறித்துக் [QBR] பதில் [* தேவன் மனிதர்களின் காரியத்தில் பதில் தருவதில்லை ] சொல்லவில்லையென்று நீர் அவருடன் ஏன் வழக்காடுகிறீர்? [QBR]
14 தேவன் ஒரு முறை சொல்லியிருக்கிற காரியத்தை [QBR] இரண்டாம் முறை பார்த்து மாற்றுகிறவரல்லவே. [QBR]
15 ஆழ்ந்த தூக்கம் மனிதர்மேல் இறங்கி, [QBR] அவர்கள் படுக்கையின்மேல் படுத்திருக்கும்போது, [QBR]
16 அவர் இரவு நேரத்துத் தரிசனமான சொப்பனத்திலே மனிதருடைய காதுகளுக்குத் தாம் செய்யும் காரியத்தை வெளிப்படுத்தி, [QBR] அதை அவர்களுக்கு வரும் தண்டனையினாலே பயமுறுத்தி, [QBR]
17 மனிதன் தன்னுடைய செயலைவிட்டு நீங்கவும், [QBR] மனிதருடைய பெருமை அடங்கவும் செய்கிறார். [QBR]
18 இவ்விதமாக அவனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கும், [QBR] அவன் உயிரைப் பட்டய வெட்டுக்கும் தப்புவிக்கிறார். [QBR]
19 அவன் தன் படுக்கையிலே வாதையினாலும், [QBR] தன் எல்லா எலும்புகளிலும் கடுமையான வியாதியினாலும் தண்டிக்கப்படுகிறான். [QBR]
20 அவன் உயிர் அப்பத்தையும், [QBR] அவனுடைய ஆத்துமா ருசிகரமான ஆகாரத்தையும் வெறுக்கும். [QBR]
21 அவனுடைய உடல் காணப்படாமல் அழிந்து, [QBR] மூடப்பட்டிருந்த அவனுடைய எலும்புகள் வெளிப்படுகிறது. [QBR]
22 அவனுடைய ஆத்துமா பாதாளத்திற்கும், அவனுடைய உயிர் மரணத்திற்கும் நெருங்குகிறது. [QBR]
23 ஆயிரத்தில் ஒருவராகிய பரிந்துபேசுகிற தேவ தூதனானவர் மனிதனுக்குத் தம்முடைய நிதானத்தை அறிவிப்பதற்கு, [QBR] அவனுக்கு சாதகமாக இருந்தாரென்றால், [QBR]
24 அவர் அவனுக்கு இரங்கி, அவன் படுகுழியில் இறங்காமல் இருக்க: [QBR] நீர் அவனைக் காப்பாற்றும்; [QBR] மீட்கும் பொருளை நான் கண்டுபிடித்தேன் என்பார். [QBR]
25 அப்பொழுது அவனுடைய உடல் வாலிபத்தில் இருந்ததைவிட ஆரோக்கியமடையும்; [QBR] தன் இளவயது நாட்களுக்குத் திரும்புவான். [QBR]
26 அவன் தேவனை நோக்கி விண்ணப்பம் செய்யும்போது, [QBR] அவன் அவருடைய சமுகத்தைக் கெம்பீரத்துடன் பார்க்கும்படி அவர் அவன்மேல் பிரியமாகி, [QBR] அந்த மனிதனுக்கு அவனுடைய நீதியின் பலனைக் கொடுப்பார். [QBR]
27 அவன் மனிதரை நோக்கிப் பார்த்து: [QBR] நான் பாவம் செய்து செம்மையானதைப் புரட்டினேன், [QBR] அது எனக்குப் பலன் கொடுக்கவில்லை. [QBR]
28 என் ஆத்துமா படுகுழியில் இறங்காமல் இருக்க, [QBR] அவர் அதை காப்பாற்றுவார் [QBR] ஆகையால் என் உயிர் வெளிச்சத்தைக் காணும் என்று சொல்லுவான். [QBR]
29 இதோ, தேவன் மனிதனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கு விலக்குகிறதற்கும், [QBR] அவனை உயிருள்ளோரின் வெளிச்சத்தினாலே பிரகாசிப்பதற்கும், [QBR]
30 அவர் இவைகளையெல்லாம் அவனிடத்தில் பலமுறை நடப்பிக்கிறார். [QBR]
31 யோபே, நீர் கவனித்து என் சொல்லைக் கேளும்; [QBR] நான் பேசப்போகிறேன், நீர் மவுனமாயிரும். [QBR]
32 சொல்லவேண்டிய நியாயங்கள் இருந்ததென்றால், [QBR] எனக்குப் பதில் கொடும்; [QBR] நீர் பேசும், உம்மை நீதிமானாக நிரூபிக்க எனக்கு ஆசையுண்டு. [QBR]
33 ஒன்றும் இல்லாதிருந்ததென்றால் நீர் என் சொல்லைக் கேளும், [QBR] மவுனமாயிரும், நான் உமக்கு ஞானத்தைப் போதிப்பேன்” என்றான். [PE]
×

Alert

×