Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Job Chapters

Job 31 Verses

1 என் கண்களுடன் உடன்படிக்கைசெய்த நான் [QBR] ஒரு கன்னிகையின்மேல் நினைவாக இருப்பதெப்படி? [QBR]
2 அப்பொழுது உன்னதங்களிலிருந்து தேவன் அளிக்கும் பங்கும், [QBR] உன்னதத்திலிருந்து சர்வவல்லமையுள்ள தேவன் கொடுக்கும் பங்கும் கிடைக்குமோ? [QBR]
3 மாறுபாடானவனுக்கு ஆபத்தும், [QBR] அக்கிரமக்காரருக்கு தண்டனையுமல்லவோ கிடைக்கும். [QBR]
4 அவர் என் வழிகளைப் பார்த்து, [QBR] என் நடைகளையெல்லாம் கணக்கிடுகிறார் அல்லவோ? [QBR]
5 நான் மாயையிலே நடந்தேனோ, [QBR] என் கால் தவறுசெய்ய வேகமானதோ என்று, [QBR]
6 சரியான தராசிலே தேவன் என்னை நிறுத்து, [QBR] என் உத்தமத்தை அறிவாராக. [QBR]
7 என் நடைகள் வழியைவிட்டு விலகினதும், [QBR] என் இருதயம் என் கண்களைப் பின்தொடர்ந்ததும், [QBR] ஏதாகிலும் ஒரு குற்றம் என் கைகளில் ஒட்டிக்கொண்டதும் இருந்தால், [QBR]
8 அப்பொழுது நான் விதைத்ததை வேறொருவன் சாப்பிடுவானாக; [QBR] என் பயிர்கள் வேர் இல்லாமல் போகக்கடவது. [QBR]
9 என் மனம் எந்தப் பெண்ணின்மேல் மயங்கி, [QBR] அடுத்தவனுடைய வாசலை நான் எட்டிப் பார்த்திருந்தால், [QBR]
10 அப்பொழுது என் மனைவி வேறொருவனுக்கு மாவரைப்பாளாக; [QBR] வேறு மனிதர் அவள்மேல் சாய்வார்களாக. [QBR]
11 அது தவறு, அது நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படும் குற்றமாமே. [QBR]
12 அது பாதாளம்வரை எரிக்கும் [QBR] நெருப்பாய் என் விளைச்சல்களையெல்லாம் அழிக்கும். [QBR]
13 என் வேலைக்காரனோ, என் வேலைக்காரியோ, என்னுடன் வழக்காடும்போது, [QBR] அவர்கள் நியாயத்தை நான் அசட்டைசெய்திருந்தால், [QBR]
14 தேவன் எழும்பும்போது, நான் என்ன செய்வேன்; [QBR] அவர் விசாரிக்கும்போது, நான் அவருக்கு திரும்ப என்ன பதில் சொல்லுவேன். [QBR]
15 தாயின் கர்ப்பத்தில் என்னை உண்டாக்கியவர் [QBR] அவனையும் உண்டாக்கினார் அல்லவோ? [QBR] ஒரேவிதமான கர்ப்பத்தில் எங்களை உருவாக்கினார் அல்லவோ? [QBR]
16 ஏழைகள் விரும்பியதை நான் கொடுக்காமலிருந்து, [QBR] விதவையின் கண்ணீரினால் கண்களைப் பூத்துப்போகவைத்து, [QBR]
17 தாய் தகப்பனில்லாத பிள்ளை என் ஆகாரத்தில் சாப்பிடாமல், [QBR] நான் ஒருவனாய்ச் சாப்பிட்டதுண்டோ? [QBR]
18 என் சிறுவயதுமுதல் அவனுடைய தகப்பனிடத்தில் வளர்வதுபோல என்னுடன் வளர்ந்தான்; [QBR] நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் அப்படிப்பட்டவர்களை கைபிடித்து நடத்தினேன். [QBR]
19 ஒருவன் உடையில்லாததினால் மடிந்துபோகிறதையும், [QBR] ஏழைக்கு அணிய ஆடையில்லாதிருக்கிறதையும் நான் கண்டபோது, [QBR]
20 அவன் என் ஆட்டுரோமக் கம்பளியினாலே அனல்கொண்டதினால், [QBR] அவனுடைய இருதயம் என்னைப் புகழாதிருந்ததும், [QBR]
21 ஒலிமுகவாசலில் எனக்குச் செல்வாக்கு உண்டென்று நான் கண்டு, [QBR] திக்கற்றவனுக்கு விரோதமாக என் கையை நீட்டினதும் உண்டானால், [QBR]
22 என் கை தோள்பட்டையிலிருந்து விலகி, [QBR] என் கையின் எலும்பு முறிந்துபோவதாக. [QBR]
23 தேவன் தண்டிப்பார் என்றும், [QBR] அவருடைய மகிமைக்கு முன் நிற்கமுடியாது என்றும், [QBR] எனக்குப் பயங்கரமாயிருந்தது. [QBR]
24 நான் பொன்னின்மேல் என் நம்பிக்கையை வைத்து, [QBR] தங்கத்தைப்பார்த்து: [QBR] நீ என் ஆதரவு என்று நான் சொன்னதும், [QBR]
25 என் செல்வம் அதிகமென்றும், [QBR] என் கைக்கு அதிகமாக கிடைத்ததென்றும் நான் மகிழ்ந்ததும், [QBR]
26 சூரியன் பிரகாசிக்கும்போதும், அல்லது சந்திரன் மகிமையாகச் செல்லும்போதும், [QBR] நான் அதை நோக்கி: [QBR]
27 என் மனம் இரகசியமாக மயங்கி, [QBR] என் வாய் என் கையை முத்தம் செய்ததுண்டானால், [QBR]
28 இதுவும் நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படத்தக்க அக்கிரமமாயிருக்கும்; [QBR] அதினால் உன்னதத்திலிருக்கிற தேவனை மறுதலிப்பேனே. [QBR]
29 என் பகைவனுடைய ஆபத்திலே நான் மகிழ்ந்து, [QBR] பொல்லாப்பு அவனுக்கு நடந்தபோது மகிழ்ந்திருந்தேனோ? [QBR]
30 அவன் உயிருக்குச் சாபத்தைக் கொடுக்க விரும்பி, [QBR] வாயினால் பாவம் செய்ய நான் இடங்கொடுக்கவில்லை. [QBR]
31 அவனுடைய இனத்தார்களில் திருப்தியாகாதவனைக் காண்பிப்பவன் யாரென்று [QBR] என் கூடாரத்தின் மனிதர் சொல்லமாட்டார்களோ? [QBR]
32 அந்நியர் வீதியிலே இரவு தங்கினதில்லை; [QBR] வழிப்போக்கனுக்கு என் வாசல்களைத் திறந்தேன். [QBR]
33 நான் ஆதாமைப்போல என் மீறுதல்களை மூடி, [QBR] என் அக்கிரமத்தை என் மடியிலே ஒளித்துவைத்தேனோ? [QBR]
34 மிகுதியான என் மக்கள் கூட்டத்திற்கு நான் பயந்ததினாலாவது, [QBR] மக்கள் செய்யும் இகழ்ச்சி என்னை அதிர்ச்சியடையச் செய்ததினாலாவது, [QBR] நான் பேசாதிருந்து, வாசற்படியைவிட்டுப் புறப்படாதிருந்தேனோ? [QBR]
35 ஆ, என் வழக்கைக் கேட்கிறவன் ஒருவன் இருந்தால் நலமாயிருக்கும்; [QBR] இதோ, சர்வவல்லவர் எனக்கு பதில் அருளிச்செய்யவும், [QBR] என் எதிராளி தன் வழக்கை எழுதிக்கொடுக்கவும் எனக்கு விருப்பமுண்டு. [QBR]
36 அதை நான் என் தோளின்மேல் வைத்து, [QBR] எனக்குக் கிரீடமாக அணிந்துகொள்வேனே. [QBR]
37 அவனுக்கு நான் என் நடைகளைத் தொகை தொகையாகக் காண்பித்து, [QBR] ஒரு பிரபுவைப்போல அவனிடத்தில் போவேன். [QBR]
38 எனக்கு விரோதமாக என் சொந்த பூமி கூப்பிடுகிறதும், [QBR] அதின் வரப்புகள்கூட அழுகிறதும், [QBR]
39 கூலிகொடுக்காமல் நான் அதின் பலனைச் சாப்பிட்டு, [QBR] பயிரிட்டவர்களின் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினதும் உண்டானால், [QBR]
40 அதில் கோதுமைக்குப் பதிலாக முள்ளும், [QBR] வாற்கோதுமைக்குப் பதிலாகக் களையும் முளைக்கட்டும்” என்றான். யோபின் வார்த்தைகள் முடிந்தது. [PE]
×

Alert

×