Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Job Chapters

Job 30 Verses

1 “இப்போதோ என்னைவிட இளவயதுள்ளவர்கள் என்னை கேலி செய்கிறார்கள்; [QBR] இவர்களுடைய தகப்பன்களை நான் என் மந்தையைக் காக்கும் நாய்களுடன் வைக்கவுங்கூட வெட்கப்பட்டிருப்பேன். [QBR]
2 வயது முதிர்ந்ததினாலே பெலனற்றுப்போன அவர்கள் கைகளினால் எனக்கு என்ன உதவியிருந்தது. [QBR]
3 குறைச்சலினாலும் பசியினாலும் அவர்கள் வாடி, [QBR] அதிக நாட்களாய் வெறுமையான வெட்டவெளிக்கு ஓடிப்போய், [QBR]
4 செடிகளுக்குள் இருக்கிற தழைகளைப் பிடுங்குவார்கள்; [QBR] காட்டுசெடிகளின் கிழங்குகள் அவர்களுக்கு ஆகாரமாயிருந்தது. [QBR]
5 அவர்கள் மனிதர்களின் நடுவிலிருந்து துரத்தப்பட்டார்கள்; [QBR] திருடனைத் துரத்துகிறதுபோல்: [QBR] திருடன் திருடன் என்று அவர்களைத் துரத்திவிட்டார்கள். [QBR]
6 அவர்கள் பள்ளத்தாக்குகளின் வெடிப்புகளிலும், [QBR] பூமியின் குகைகளிலும், கன்மலைகளிலும் போய் குடியிருந்தார்கள். [QBR]
7 செடிகளுக்குள்ளிருந்து கதறி, முட்செடிகளின்கீழ் ஒதுங்கினார்கள். [QBR]
8 அவர்கள் மூடரின் மக்களும், தகுதியில்லாதவரின் பிள்ளைகளும், [QBR] தேசத்திலிருந்து துரத்தப்பட்டவர்களுமாக இருந்தார்கள். [QBR]
9 ஆனாலும் இப்போது நான் அவர்களுக்குப் பாட்டும் பழமொழியும் ஆனேன். [QBR]
10 என்னை மிகவும் வெறுத்து, எனக்குத் தூரமாகி, [QBR] என் முகத்திற்கு முன்பாகத் துப்பத் தயங்காதிருக்கிறார்கள். [QBR]
11 நான் கட்டின கட்டை அவர் அவிழ்த்து, [QBR] என்னைச் சிறுமைப்படுத்தினதினால், [QBR] அவர்களும் கடிவாளத்தை என் முகத்திற்கு முன்பாக உதறிவிட்டார்கள். [QBR]
12 வலதுபுறத்தில் வாலிபர் எழும்பி, என் கால்களைத் தவறி விழவைத்து, [QBR] தங்கள் கேடான வழிகளை எனக்கு நேராக ஆயத்தப்படுத்துகிறார்கள். [QBR]
13 என் பாதையைக் கெடுத்து, என் ஆபத்தைப் பெருகச் செய்கிறார்கள்; [QBR] அதற்கு அவர்களுக்கு உதவி செய்கிறவர்கள் தேவையில்லை. [QBR]
14 பெரிய வழியை உண்டாக்கி, [QBR] தாங்கள் கெடுத்த வழியில் புரண்டு வருகிறார்கள். [QBR]
15 பயங்கரங்கள் என்மேல் திரும்பிவருகிறது, [QBR] அவைகள் காற்றைப்போல என் ஆத்துமாவைப் பின்தொடருகிறது; [QBR] என் செழித்தவாழ்வு ஒரு மேகத்தைப்போல் கடந்துபோனது. [QBR]
16 ஆகையால் இப்போது என் ஆத்துமா என்னில் சோர்ந்துபோனது; [QBR] உபத்திரவத்தின் நாட்கள் என்னைப் பிடித்துக் கொண்டது. [QBR]
17 இரவுநேரத்திலே என் எலும்புகள் துளைக்கப்பட்டு, [QBR] என் நரம்புகளுக்கு இளைப்பாறுதல் இல்லாதிருக்கிறது. [QBR]
18 வியாதியின் கடுமையினால் என் உடை மாறிப்போனது; [QBR] அது என் அங்கியின் கழுத்துப்பட்டையைப்போல, [QBR] என்னைச் சுற்றிக்கொண்டது. [QBR]
19 சேற்றிலே தள்ளப்பட்டேன்; [QBR] புழுதிக்கும் சாம்பலுக்கும் ஒப்பானேன். [QBR]
20 தேவனே உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; [QBR] நீர் எனக்கு பதில் கொடுக்காமலிருக்கிறீர்; [QBR] கெஞ்சி நிற்கிறேன், என்மேல் பாராமுகமாயிருக்கிறீர். [QBR]
21 என்மேல் கோபமுள்ளவராக மாறினீர்; [QBR] உம்முடைய கரத்தின் வல்லமையால் என்னை விரோதிக்கிறீர். [QBR]
22 நீர் என்னைத் தூக்கி, என்னைக் காற்றிலே பறக்கவிட்டு, [QBR] என்னைப் பயத்தினால் அழிந்துபோகச் செய்கிறீர். [QBR]
23 வாழ்வோர் அனைவருக்கும் குறிக்கப்பட்ட தங்கும் இடமாகிய மரணத்திற்கு என்னை ஒப்புக்கொடுப்பீர் என்று அறிவேன். [QBR]
24 ஆனாலும் நான் எந்த ஒருவனை அவன் ஆபத்திலே தவிக்கவைத்ததும், [QBR]
25 துன்பப்படுகிறவனைப் பார்த்து அவனுக்காக நான் அழாதிருந்ததும், [QBR] ஏழைக்காக என் ஆத்துமா கவலைப்படாதிருந்ததும் உண்டானால், [QBR] அவர் என் விண்ணப்பத்திற்கு இடங்கொடாமல், [QBR] எனக்கு விரோதமாகத் தமது கையை நீட்டுவாராக. [QBR]
26 நன்மைக்காகக் காத்திருந்த எனக்குத் தீமை வந்தது; [QBR] வெளிச்சம் வருமென்று பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இருள் வந்தது. [QBR]
27 என் உள்ளம் கொதித்து, [QBR] அமைதல் இல்லாதிருக்கிறது; உபத்திரவநாட்கள் என்மேல் வந்தது. [QBR]
28 வெயில் படாதிருந்தும், நான் கறுகறுத்து அலைகிறேன்; [QBR] நான் சபையிலிருந்து எழுந்திருக்கும்போது அலறுகிறேன். [QBR]
29 நான் தீக்கோழிகளுக்குச் சகோதரனும், [QBR] நரிகளுக்குத் தோழனுமானேன். [QBR]
30 என் தோல் என்மேல் கறுத்துப்போனது; [QBR] என் எலும்புகள் வெப்பத்தினால் காய்ந்துபோனது. [QBR]
31 என் சுரமண்டலம் புலம்பலாகவும், [QBR] என் கின்னரம் அழுகிறவர்களின் சத்தமாகவும் மாறின. [PE]
×

Alert

×