Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Job Chapters

Job 29 Verses

1 பின்னும் யோபு தன் பிரசங்க வாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது: [QBR]
2 “கடந்துபோன வருடங்களிலும், தேவன் என்னைக் காப்பாற்றிவந்த நாட்களிலும் [QBR] எனக்கு உண்டாயிருந்த ஒழுங்கு இப்பொழுது இருந்தால் நலமாயிருக்கும். [QBR]
3 அப்பொழுது அவர் தீபம் என் தலையின்மேல் பிரகாசித்தது; [QBR] அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோனேன். [QBR]
4 தேவனுடைய இரகசியச்செயல் என் வீட்டின்மேல் இருந்தது. [QBR]
5 அப்பொழுது சர்வவல்லமையுள்ள தேவன் என்னுடன் இருந்தார்; [QBR] என் பிள்ளைகள் என்னைச் சூழ்ந்திருந்தார்கள். [QBR]
6 என் பாதங்களை நான் நெய்யினால் கழுவினேன்; [QBR] கன்மலைகளிலிருந்து எனக்காக எண்ணெய் நதிபோல ஓடிவந்தது; [QBR] அந்தச் செல்வநாட்களின் ஒழுங்கு இப்போதிருந்தால் நலமாயிருக்கும். [QBR]
7 நான் பட்டணவீதியின் வாசலுக்குள் புறப்பட்டுப்போய், [QBR] வீதியில் என் இருக்கையைப் போடும்போது, [QBR]
8 வாலிபர் என்னைக் கண்டு ஒளித்துக்கொள்வார்கள்; [QBR] முதியோர் எழுந்து நிற்பார்கள். [QBR]
9 பிரபுக்கள் பேசுகிறதை நிறுத்தி, [QBR] கையால் தங்கள் வாயைப் பொத்திக்கொள்வார்கள். [QBR]
10 பெரியோரின் சத்தம் அடங்கி, [QBR] அவர்கள் நாக்கு அவர்கள் மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளும். [QBR]
11 என்னைக் கேட்ட காது என்னைப் பாக்கியவான் என்றது; [QBR] என்னைக் கண்ட கண் எனக்குச் சாட்சியிட்டது. [QBR]
12 முறையிடுகிற ஏழையையும், திக்கற்ற பிள்ளையையும், [QBR] உதவியற்றவனையும் காப்பாற்றினேன். [QBR]
13 அழிந்துபோக இருந்தவனுடைய ஆசீர்வாதம் என்மேல் வந்தது; விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கச் செய்தேன். [QBR]
14 நீதியை அணிந்துகொண்டேன்; [QBR] அது என் ஆடையாயிருந்தது; [QBR] என் நியாயம் எனக்குச் சால்வையும் தலைப்பாகையுமாக இருந்தது. [QBR]
15 நான் குருடனுக்குக் கண்ணும், [QBR] சப்பாணிக்குக் காலாகவும் இருந்தேன். [QBR]
16 நான் எளியவர்களுக்குத் தகப்பனாக இருந்து, [QBR] நான் அறியாத வழக்கை ஆராய்ந்துபார்த்தேன். [QBR]
17 நான் அநியாயக்காரருடைய கடைவாய்ப் பற்களை உடைத்து, [QBR] அவர்கள் பறித்ததை அவர்கள் பற்களிலிருந்து பிடுங்கினேன். [QBR]
18 என் கூட்டிலே நான் வாழ்ந்திருப்பேன்; [QBR] என் நாட்களை மணலைப்போலப் பெருகச் செய்வேன் என்றேன். [QBR]
19 என் வேர் தண்ணீர்களின் ஓரமாகப் படர்ந்தது; [QBR] என் கிளையின்மேல் பனி இரவுமுழுவதும் தங்கியிருந்தது. [QBR]
20 என் மகிமை என்னில் செழித்தோங்கி, [QBR] என் கையிலுள்ள என் வில் புதுப்பெலன் கொண்டது. [QBR]
21 எனக்குச் செவிகொடுத்துக் காத்திருந்தார்கள்; [QBR] என் ஆலோசனையைக் கேட்டு மவுனமாயிருந்தார்கள். [QBR]
22 என் பேச்சுக்குப் பேசாமலிருந்தார்கள்; [QBR] என் வசனம் அவர்கள்மேல் மழைத்துளியாக விழுந்தது. [QBR]
23 மழைக்குக் காத்திருக்கிறதுபோல் எனக்குக் காத்திருந்து, [QBR] பின் மாரிக்கு ஆசையுள்ளவர்கள்போல தங்கள் வாயை ஆவென்று திறந்திருந்தார்கள். [QBR]
24 நான் அவர்களைப் பார்த்து சிரிக்கும்போது, [QBR] அவர்கள் துணிகரங்கொள்ளவில்லை; என் முகக்களையை மாறவைக்கவும் இல்லை. [QBR]
25 அவர்கள் வழியில்போக எனக்கு விருப்பமாகும்போது, [QBR] நான் தலைவனாய் அமர்ந்து, [QBR] படைக்குள் ராஜாவைப்போலவும், [QBR] துக்கித்தவர்களைத் தேற்றுகிறவனாகவும் இருந்தேன். [PE]
×

Alert

×