Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Job Chapters

Job 22 Verses

1 {எலிப்பாஸின் வார்த்தைகள்} [PS] அப்பொழுது தேமானியனான எலிப்பாஸ் மறுமொழியாக: [QBR]
2 “ஒரு மனிதன் விவேகியாயிருந்து, [QBR] தனக்குத்தான் நன்மையாக இருக்கிறதினால் தேவனுக்கு நன்மையாக இருப்பானோ? [QBR]
3 நீர் நீதிமானாயிருப்பதினால் சர்வவல்லவருக்கு நன்மையுண்டாகுமோ? [QBR] நீர் உம்முடைய வழிகளை உத்தமமாக்குகிறது [QBR] அவருக்கு ஆதாயமாயிருக்குமோ? [QBR]
4 அவர் உமக்குப் பயந்து உம்முடன் வழக்காடி, [QBR] உம்முடன் நியாயத்திற்கு வருவாரோ? [QBR]
5 உம்முடைய பொல்லாப்பு பெரியதும், [QBR] உம்முடைய அக்கிரமங்கள் முடிவில்லாதவைகளுமாக இருக்கிறதல்லவோ? [QBR]
6 காரணமில்லாமல் உம்முடைய சகோதரர் கையில் அடகு வாங்கி, [QBR] ஏழைகளின் ஆடைகளைப் பறித்துக்கொண்டீர். [QBR]
7 மிகுந்த தாகமுள்ளவனுக்கு தண்ணீர் கொடுக்காமலும், [QBR] பசித்தவனுக்கு ஆகாரம் கொடுக்காமலும் போனீர். [QBR]
8 பலவானுக்கே தேசத்தில் இடமுண்டாயிருக்கிறது; [QBR] கனவான் அதில் குடியேறினான். [QBR]
9 விதவைகளை வெறுமையாக அனுப்பிவிட்டீர்; [QBR] தாய்தகப்பன் இல்லாதவர்களின் கைகள் முறிக்கப்பட்டது. [QBR]
10 ஆகையால் கண்ணிகள் உம்மைச் சூழ்ந்திருக்கிறது; [QBR] திடீரென்று உமக்கு வந்த பயங்கரம் உம்மைக் கலங்கச் செய்கிறது. [QBR]
11 நீர் பார்க்க முடியாமலிருக்க இருள் வந்தது, [QBR] பெருவெள்ளம் உம்மை மூடுகிறது. [QBR]
12 தேவன் பரலோகத்தின் உன்னதங்களிலிருக்கிறார் அல்லவோ? [QBR] நட்சத்திரங்களின் உயரத்தைப் பாரும், அவைகள் எத்தனை உயரமாயிருக்கிறது. [QBR]
13 நீர்: தேவன் எப்படி அறிவார், [QBR] இருளுக்கு அப்புறத்திலிருக்கிறவர் நியாயம் விசாரிக்கக்கூடுமோ? [QBR]
14 அவர் பார்க்காமலிருக்க மேகங்கள் அவருக்கு மறைவாயிருக்கிறது; [QBR] வானமண்டலங்களின் சக்கரத்திலே அவர் உலாவுகிறார் என்று சொல்லுகிறீர். [QBR]
15 அக்கிரம மனிதர்கள் ஆரம்பகாலத்தில் நடந்த பாதையை கவனித்துப் பார்த்தீரோ? [QBR]
16 காலம் வருமுன்னே அவர்கள் இறந்துபோனார்கள்; [QBR] அவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் வெள்ளம் புரண்டது. [QBR]
17 தேவன் அவர்கள் வீடுகளை நன்மையால் நிரப்பியிருந்தாலும், [QBR] அவர்கள் அவரை நோக்கி: எங்களைவிட்டு விலகும், [QBR] சர்வவல்லவராலே எங்களுக்கு என்ன ஆகும் என்றார்கள். [QBR]
18 ஆகையால் துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக. [QBR]
19 எங்கள் நிலைமை அழியாமல், [QBR] அவர்களுக்கு மீதியானதையோ நெருப்பு எரித்ததென்பதை நீதிமான்கள் கண்டு சந்தோஷப்படுகிறார்கள். [QBR]
20 குற்றமில்லாதவன் அவர்களைப் பார்த்து சிரிக்கிறான். [QBR]
21 நீர் அவருடன் பழகி சமாதானமாயிரும்; [QBR] அதினால் உமக்கு நன்மைவரும். [QBR]
22 அவர் வாயிலிருந்து பிறந்த வேதப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு, [QBR] அவர் வார்த்தைகளை உம்முடைய இருதயத்தில் வைத்துக்கொள்ள வேண்டுகிறேன். [QBR]
23 நீர் சர்வவல்லமையுள்ள தேவனிடத்தில் மனந்திரும்பினால், [QBR] திரும்பக் கட்டப்படுவீர்; அநீதியை உமது கூடாரத்திற்குத் தூரமாக்குவீர். [QBR]
24 அப்பொழுது தூளைப்போல் பொன்னையும், [QBR] ஆற்றுக் கற்களைப்போல் ஓப்பீரின் தங்கத்தையும் சேர்த்துவைப்பீர். [QBR]
25 அப்பொழுது சர்வவல்லவர் தாமே உமக்குப் பசும்பொன்னும், உமக்குச் சுத்தவெள்ளியுமாயிருப்பார். [QBR]
26 அப்பொழுது சர்வவல்லமையுள்ள தேவன் மேல் மனமகிழ்ச்சியாயிருந்து, தேவனுக்கு நேராக உம்முடைய முகத்தை ஏறெடுப்பீர். [QBR]
27 நீர் அவரை நோக்கி விண்ணப்பம்செய்ய, அவர் உமக்குச் செவிகொடுப்பார்; [QBR] அப்பொழுது நீர் உம்முடைய பொருத்தனைகளைச் செலுத்துவீர். [QBR]
28 நீர் ஒரு காரியத்தை தீர்மானித்தால், அது உமக்கு நிலைவரப்படும்; [QBR] உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும். [QBR]
29 மனிதர் ஒடுக்கப்படும்போது திடப்படக்கடவர்கள் என்று நீர் சொல்ல, [QBR] தாழ்ந்தோர் காப்பாற்றப்படுவார்கள். [QBR]
30 குற்றமில்லாதவனையுங்கூட விடுவிப்பார்; [QBR] உம்முடைய கைகளின் சுத்தத்தினால் அவன் விடுவிக்கப்படுவான்” என்றான். [PE]
×

Alert

×