Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Job Chapters

Job 21 Verses

1 {யோபுவின் வார்த்தைகள்} [PS] யோபு மறுமொழியாக: [QBR]
2 “என் வசனத்தைக் கவனமாகக் கேளுங்கள்; [QBR] இது நீங்கள் என்னை ஆறுதல் செய்வதுபோல இருக்கும். [QBR]
3 நான் பேசப்போகிறேன், சகித்திருங்கள்; [QBR] நான் பேசினபின்பு கேலிசெய்யுங்கள். [QBR]
4 நான் மனிதனைப்பார்த்தா அங்கலாய்க்கிறேன்? [QBR] அப்படியானாலும் என் ஆவி வேதனைப்படாதிருக்குமா? [QBR]
5 என்னைக் கவனித்துப்பாருங்கள், [QBR] அப்பொழுது நீங்கள் ஆச்சரியப்பட்டு, [QBR] உங்கள் வாயைக் கையால் பொத்திக்கொள்வீர்கள். [QBR]
6 இதை நான் நினைக்கும்போது கலங்குகிறேன்; [QBR] நடுக்கம் என் சரீரத்தைப் பிடிக்கும். [QBR]
7 துன்மார்க்கர் முதிர்வயதுவரை உயிருடனிருந்து, [QBR] ஏன் வல்லவராகவேண்டும்? [QBR]
8 அவர்களுடன் அவர்கள் சந்ததியார் அவர்களுக்கு முன்பாகவும், [QBR] அவர்கள் பிள்ளைகள் அவர்கள் கண்களுக்கு முன்பாகவும் திடப்படுகிறார்கள். [QBR]
9 அவர்கள் வீடுகள் பயமில்லாமல் பத்திரமாக இருக்கும்; [QBR] தேவனுடைய தண்டனை அவர்கள்மேல் வருகிறதில்லை. [QBR]
10 அவர்களுடைய எருது பொலிந்தால், வீணாய்ப்போகாது; [QBR] அவர்களுடைய பசு சினை அழியாமல் ஈனுகிறது. [QBR]
11 அவர்கள் தங்கள் குழந்தைகளை ஒரு மந்தையைப்போல வெளியே போகவிடுகிறார்கள்; [QBR] அவர்கள் பிள்ளைகள் குதித்து விளையாடுகிறார்கள். [QBR]
12 அவர்கள் தம்புரையும் சுரமண்டலத்தையும் எடுத்துப் பாடி, [QBR] கின்னரத்தின் ஓசைக்குச் சந்தோஷப்படுகிறார்கள். [QBR]
13 அவர்கள் சமாதானமாய் தங்கள் நாட்களைப் போக்கி, [QBR] [* சமாதானம்] ஒரு நொடிப்பொழுதிலே பாதாளத்தில் இறங்குகிறார்கள். [QBR]
14 அவர்கள் தேவனை நோக்கி: எங்களைவிட்டு விலகியிரும், [QBR] உம்முடைய வழிகளை அறிய விரும்பவில்லை; [QBR]
15 சர்வவல்லமையுள்ள தேவனை நாம் ஆராதிக்க அவர் யார்? [QBR] அவரை நோக்கி ஜெபம் செய்வதினால் நமக்கு பலன் என்ன என்கிறார்கள். [QBR]
16 ஆனாலும் அவர்கள் வாழ்வு அவர்கள் கையிலிருக்காது; [QBR] துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக. [QBR]
17 எத்தனை வேகமாக துன்மார்க்கரின் விளக்கு அணைந்துபோகும்; [QBR] அவர் தமது கோபத்தினால் வேதனைகளைப் பகிர்ந்துகொடுக்கும்போது, [QBR] அவர்கள் ஆபத்து அவர்கள்மேல் வரும். [QBR]
18 அவர்கள் காற்றின் திசையிலிருக்கிற துரும்பைப்போலவும், [QBR] பெருங்காற்று பறக்கடிக்கிற பதரைப்போலவும் இருக்கிறார்கள். [QBR]
19 தேவன் அவனுடைய அக்கிரமத்தை அவனுடைய பிள்ளைகளுக்கு வைத்து வைக்கிறார்; [QBR] அவன் உணர்வடையும்விதத்தில் அதை அவனுக்குப் பலிக்கச் செய்கிறார். [QBR]
20 அவனுடைய அழிவை அவனுடைய கண்கள் காணும், [QBR] சர்வவல்லமையுள்ள தேவனை கடுங்கோபத்தை குடிப்பான். [QBR]
21 அவனுடைய மாதங்களின் தொகை குறைக்கப்படும்போது, [QBR] அவனுக்குப் பிறகு அவனுடைய வீட்டைப்பற்றி அவனுக்கு இருக்கும் விருப்பமென்ன? [QBR]
22 உயர்ந்தோரை நியாயந்தீர்க்கிற தேவனுக்கு அறிவை உணர்த்த யாராலாகும்? [QBR]
23 ஒருவன் நிர்வாகத்துடனும் சுகத்துடனும் வாழ்ந்து குறையற்ற பெலனுள்ளவனாய் இறக்கிறான். [QBR]
24 அவனுடைய உடல் கொழுப்பால் நிறைந்திருக்கிறது, [QBR] அவனுடைய எலும்புகளில் ஊன் உறுதியாயிருக்கிறது. [QBR]
25 வேறொருவன் ஒரு நாளாவது சந்தோஷத்துடன் சாப்பிடாமல், [QBR] மனவேதனையுடன் இறக்கிறான். [QBR]
26 இருவரும் சமமாக மண்ணிலே படுத்துக்கொள்ளுகிறார்கள்; [QBR] புழுக்கள் அவர்களை மூடும். [QBR]
27 இதோ, நான் உங்கள் நினைவுகளையும், [QBR] நீங்கள் என்னைப்பற்றி அநியாயமாகக் கொண்டிருக்கும் ஆலோசனைகளையும் அறிவேன். [QBR]
28 பிரபுவின் வீடு எங்கே? துன்மார்க்கருடைய கூடாரம் எங்கே? [QBR] என்று சொல்லுகிறீர்கள். [QBR]
29 வழியிலே நடந்து போகிறவர்களை நீங்கள் கேட்கவில்லையா, [QBR] அவர்கள் சொல்லும் குறிப்புகளை நீங்கள் அறியவில்லையா? [QBR]
30 துன்மார்க்கன் ஆபத்து நாளுக்காக வைக்கப்படுகிறான்; [QBR] அவனுடைய கோபாக்கினையின் நாளுக்காக கொண்டுவரப்படுகிறான். [QBR]
31 அவனுடைய வழியை அவனுடைய முகத்திற்கு முன்பாக எடுத்துக் காட்டுகிறவன் யார்? [QBR] அவனுடைய செய்கைக்குத் தக்க பலனை அவனுக்கு ஈடுகட்டுகிறவன் யார்? [QBR]
32 அவன் கல்லறைக்குக் கொண்டுவரப்படுகிறான்; [QBR] அவனுடைய கல்லறை காக்கப்பட்டிருக்கும். [QBR]
33 பள்ளத்தாக்கின் புழுதி மண்கள் அவனுக்கு இன்பமாயிருக்கும்; [QBR] அவனுக்கு முன்னாக அனேக மக்கள் போனதுபோல, [QBR] அவனுக்குப் பின்னாக ஒவ்வொருவரும் அவ்விடத்திற்குச் செல்லுவார்கள். [QBR]
34 நீங்கள் வீணாக எனக்கு ஆறுதலை சொல்லுகிறது என்ன? [QBR] உங்கள் மறுமொழிகளில் முழுவதும் பொய் இருக்கிறது” என்றான். [PE]
×

Alert

×