Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Job Chapters

Job 14 Verses

1 “பெண்ணிடத்தில் பிறந்த மனிதன் வாழ்நாள் குறுகினவனும் [QBR] வருத்தம் நிறைந்தவனுமாயிருக்கிறான். [QBR]
2 அவன் பூவைப்போலப் பூத்துமறைந்து போகிறான்; [QBR] நிழலைப்போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான். [QBR]
3 ஆகிலும் இப்படிப்பட்டவன்மேல் நீர் உம்முடைய கண்களைத் திறந்துவைத்து, [QBR] உம்முடைய நியாயத்திற்கு என்னைக் கொண்டுபோவீரோ? [QBR]
4 அசுத்தமானதிலிருந்து சுத்தமானதைப் பிறக்கவைப்பவன் உண்டோ? [QBR] ஒருவனுமில்லை. [QBR]
5 அவனுடைய நாட்கள் இவ்வளவுதான் என்று குறிக்கப்பட்டிருப்பதால், [QBR] அவனுடைய மாதங்களின் எண்ணிக்கை உம்மிடத்தில் இருக்கிறது; [QBR] அவன் கடந்துபோகமுடியாத எல்லையை அவனுக்கு ஏற்படுத்தினீர். [QBR]
6 அவன் ஒரு கூலிக்காரனைப்போல தன் நாளின் வேலை முடிந்தது என்று நிம்மதியடையும்வரை அவன் ஓய்ந்திருக்க உமது பார்வையை அவனைவிட்டு விலக்கும். [QBR]
7 ஒரு மரத்தைக்குறித்தாவது நம்பிக்கையுண்டு; [QBR] அது வெட்டிப்போடப்பட்டாலும் திரும்பத் தழைக்கும், [QBR] அதின் இளங்கிளைகள் துளிர்க்கும்; [QBR]
8 அதின் வேர் தரையிலே பழையதாகி, [QBR] அதின் அடிக்கட்டை மண்ணிலே செத்தாலும், [QBR]
9 தண்ணீரின் வாசனையினால் அது துளிர்த்து, [QBR] இளமரம்போலக் கிளைவிடும். [QBR]
10 மனிதனோவென்றால் இறந்தபின் ஒழிந்துபோகிறான், [QBR] மனிதன் இறந்துபோனபின் அவன் எங்கே? [QBR]
11 தண்ணீர் ஏரியிலிருந்து வடிந்து, [QBR] வெள்ளம் வற்றிக் காய்ந்துபோகிறதுபோல, [QBR]
12 மனிதன் படுத்துக்கிடக்கிறான், [QBR] வானங்கள் ஒழிந்துபோகும்வரை எழுந்திருக்கிறதும் இல்லை, [QBR] தூக்கம் தெளிந்து விழிக்கிறதும் இல்லை. [QBR]
13 நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, [QBR] உமது கோபம் தணியும்வரை என்னை மறைத்து, [QBR] என்னைத் திரும்ப நினைப்பதற்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும். [QBR]
14 மனிதன் இறந்தபின் பிழைப்பானோ? [QBR] எனக்கு மாறுதல் எப்போது வருமென்று [QBR] எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன். [QBR]
15 என்னைக் கூப்பிடும், அப்பொழுது நான் உமக்கு பதில் சொல்லுவேன்; [QBR] உமது கைகளின் செயல்களின்மேல் விருப்பம் வைப்பீராக. [QBR]
16 இப்பொழுது என் நடைகளை எண்ணுகிறீர்; [QBR] என் பாவத்தின்மேலல்லவோ கவனமாயிருக்கிறீர். [QBR]
17 என் மீறுதல் ஒரே கட்டாகக் கட்டப்பட்டு [QBR] முத்திரைபோடப்பட்டிருக்கிறது, என் அக்கிரமத்தை ஒன்று சேர்த்தீர். [QBR]
18 மலைகளெல்லாம் விழுந்து கரைந்துபோகும்; [QBR] கன்மலை தன் இடத்தைவிட்டுப் பெயர்ந்துபோகும். [QBR]
19 தண்ணீர் கற்களைக் குடையும்; [QBR] பெருவெள்ளம் பூமியின் தூளில் முளைத்ததை மூடும்; [QBR] அப்படியே மனிதன் கொண்டிருக்கும் நம்பிக்கையை அழிக்கிறீர். [QBR]
20 நீர் என்றைக்கும் அவனைப் பலமாக நெருக்குகிறதினால் அவன் போய்விடுகிறான்; [QBR] அவனுடைய முகரூபத்தை மாற்றி அவனை அனுப்பிவிடுகிறீர். [QBR]
21 அவனுடைய பிள்ளைகள் கனமடைந்தாலும் அவன் உணரமாட்டான்; [QBR] அவர்கள் சிறுமைப்பட்டாலும் அவர்களைக் கவனிக்கமாட்டான். [QBR]
22 அவனுடைய உடல் அவனிலிருக்கும்வரை அதற்கு வியாதியிருக்கும்; [QBR] அவனுடைய ஆத்துமா அவனுக்குள்ளிருக்கும்வரை அதற்குத் துக்கமுண்டு” என்றான். [PE]
×

Alert

×