Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Exodus Chapters

Exodus 15 Verses

1 {மோசே மற்றும் மிரியாம் பாடின பாடல்} [PS] அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் மக்களும் யெகோவாவைப் புகழ்ந்துபாடின பாட்டு: [QBR] யெகோவாவைப் பாடுவேன்; [QBR] “அவர் மகிமையாக வெற்றி சிறந்தார்; [QBR] குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார். [QBR]
2 யெகோவா என்னுடைய பெலனும் [QBR] என்னுடைய கீதமுமானவர்; [QBR] அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; [QBR] அவரே என்னுடைய தேவன், [QBR] அவருக்கு வாசஸ்தலத்தை [QBR] ஆயத்தம்செய்வேன்; [QBR] அவரே என் தகப்பனுடைய தேவன், [QBR] அவரை உயர்த்துவேன்; [QBR]
3 யெகோவாவே யுத்தத்தில் வல்லவர்; [QBR] என்பது யெகோவா அவருடைய நாமம். [QBR]
4 பார்வோனின் இரதங்களையும் [QBR] அவனுடைய சேனைகளையும் கடலிலே தள்ளிவிட்டார்; [QBR] அவனுடைய முதன்மையான அதிகாரிகள் [QBR] செங்கடலில் அமிழ்ந்துபோனார்கள். [QBR]
5 ஆழம் அவர்களை மூடிக்கொண்டது; [QBR] கல்லைப்போல ஆழங்களில் அமிழ்ந்துபோனார்கள். [QBR]
6 யெகோவாவே, உம்முடைய வலதுகரம் பெலத்தினால் மகத்துவம் சிறந்திருக்கிறது; [QBR] யெகோவாவே, உம்முடைய வலதுகரம் எதிரியை நொறுக்கிவிட்டது. [QBR]
7 உமக்கு விரோதமாக எழும்பினவர்களை உமது பெரிய மகத்துவத்தினாலே அழித்துப்போட்டீர்; உம்முடைய கோபத்தை அனுப்பினீர், [QBR] அது அவர்களை வைக்கோல்தாளடியைப்போல எரித்தது. [QBR]
8 உமது நாசியின் சுவாசத்தினால் தண்ணீர் குவிந்து நின்றது; [QBR] வெள்ளம் குவியலாக நிமிர்ந்து நின்றது; [QBR] ஆழமான தண்ணீர் நடுக்கடலிலே உறைந்துபோனது. [QBR]
9 தொடருவேன், பிடிப்பேன், கொள்ளையடித்துப் பங்கிடுவேன், [QBR] என்னுடைய ஆசை அவர்களிடம் திருப்தியாகும், [QBR] என்னுடைய பட்டயத்தை உருவுவேன், [QBR] என்னுடைய கை அவர்களை அழிக்கும் என்று எதிரி சொன்னான். [QBR]
10 உம்முடைய காற்றை வீசச்செய்தீர், [QBR] கடல் அவர்களை மூடிக்கொண்டது; [QBR] திரளான தண்ணீர்களில் ஈயம்போல அமிழ்ந்துபோனார்கள். [QBR]
11 யெகோவாவே, [QBR] தெய்வங்களில் உமக்கு ஒப்பானவர் யார்? [QBR] பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், [QBR] அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்? [QBR]
12 நீர் உமது வலதுகரத்தை நீட்டினீர்; [QBR] பூமி அவர்களை விழுங்கிப்போட்டது. [QBR]
13 நீர் மீட்டுக்கொண்ட இந்த மக்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர்; [QBR] உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திற்கு நேராக அவர்களை உமது பெலத்தினால் வழிநடத்தினீர். [QBR]
14 மக்கள் அதைக் கேட்டுத் தத்தளிப்பார்கள்; [QBR] பெலிஸ்தியாவில் குடியிருப்பவர்களைத் திகில் பிடிக்கும். [QBR]
15 ஏதோமின் பிரபுக்கள் கலங்குவார்கள்; [QBR] மோவாபின் பலசாலிகளை நடுக்கம் பிடிக்கும்; [QBR] கானானில் குடியிருப்பவர்கள் யாவரும் கரைந்துபோவார்கள். [QBR]
16 பயமும் திகிலும் அவர்கள்மேல் விழும். [QBR] யெகோவாவே, உமது மக்கள் கடந்துபோகும்வரையும், [QBR] நீர் மீட்ட மக்கள் கடந்துபோகும்வரையும், [QBR] அவர்கள் உம்முடைய கரத்தின் மகத்துவத்தினால் [QBR] கல்லைப்போல அசைவில்லாமல் இருப்பார்கள். [QBR]
17 நீர் அவர்களைக் கொண்டுபோய், [QBR] யெகோவாவாகிய தேவரீர் தங்குவதற்கு [QBR] நியமித்த இடமாகிய உம்முடைய சுதந்திரத்தின் பர்வதத்திலும், [QBR] ஆண்டவராகிய தேவரீருடைய கரங்கள் உண்டாக்கிய [QBR] பரிசுத்த ஸ்தலத்திலும் அவர்களை நாட்டுவீர். [QBR]
18 யெகோவா சதாகாலங்களாகிய என்றென்றைக்கும் ராஜரிகம்செய்வார். [QBR]
19 பார்வோனின் குதிரைகள் அவனுடைய இரதங்களோடும் [QBR] குதிரைவீரர்களோடும் கடலில் நுழைந்தது; [QBR] யெகோவா கடலின் தண்ணீரை அவர்கள்மேல் திரும்பச்செய்தார்; [QBR] இஸ்ரவேலர்களோ கடலின் நடுவே காய்ந்த நிலத்திலே நடந்துபோனார்கள்” என்று பாடினார்கள்.
20 {மிரியாம் பாடின பாடல்} [PS] ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன்னுடைய கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள்; எல்லாப் பெண்களும் தம்புருக்களோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்.
21 மிரியாம் அவர்களுக்குப் பதிலாக: [QBR] யெகோவாவைப் பாடுங்கள், [QBR] அவர் மகிமையாக வெற்றிசிறந்தார்; [QBR] குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார் [PE][PS] என்று பாடினாள். [PS]
22 {மாரா மற்றும் ஏலீமின் தண்ணீர்கள்} [PS] பின்பு மோசே இஸ்ரவேல் மக்களைச் செங்கடலிலிருந்து பயணமாக நடத்தினான். அவர்கள் சூர் வனாந்திரத்திற்குப் புறப்பட்டுப்போய், மூன்று நாட்கள் வனாந்திரத்தில் தண்ணீர் கிடைக்காமல் நடந்தார்கள்.
23 அவர்கள் மாராவிற்கு [* கசப்பு] வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாக இருந்ததால் அதைக் குடிக்க அவர்களுக்கு முடியாமல் இருந்தது; அதினால் அந்த இடத்திற்கு மாரா என்று பெயரிடப்பட்டது.
24 அப்பொழுது மக்கள் மோசேக்கு விரோதமாக முறுமுறுத்து: என்னத்தைக் குடிப்போம் என்றார்கள்.
25 மோசே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டான்; அப்பொழுது யெகோவா மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்; அதை அவன் தண்ணீரில் போட்டவுடன், அது இனிமையான தண்ணீரானது. அவர் அங்கே அவர்களுக்கு ஒரு கட்டளையையும், ஒரு நீதிநெறிகளையும் கட்டளையிட்டு, அங்கே அவர்களைச் சோதித்து:
26 நீ உன்னுடைய தேவனாகிய யெகோவாவின் சத்தத்தைக் கவனமாகக் கேட்டு, அவருடைய பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவருடைய கட்டளைகளுக்குக் கவனித்து, அவருடைய கட்டளைகள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியர்களுக்கு வரச்செய்த வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரச்செய்யாதிருப்பேன்; நானே உன்னை குணப்படுத்தும் யெகோவா” என்றார். [PE][PS]
27 பின்பு அவர்கள் ஏலிமுக்கு வந்தார்கள்; அங்கே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது; அங்கே தண்ணீர் அருகே முகாமிட்டார்கள். [PE]
×

Alert

×