யெகோவா என்னுடைய பெலனும் [QBR] என்னுடைய கீதமுமானவர்; [QBR] அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; [QBR] அவரே என்னுடைய தேவன், [QBR] அவருக்கு வாசஸ்தலத்தை [QBR] ஆயத்தம்செய்வேன்; [QBR] அவரே என் தகப்பனுடைய தேவன், [QBR] அவரை உயர்த்துவேன்; [QBR]
தொடருவேன், பிடிப்பேன், கொள்ளையடித்துப் பங்கிடுவேன், [QBR] என்னுடைய ஆசை அவர்களிடம் திருப்தியாகும், [QBR] என்னுடைய பட்டயத்தை உருவுவேன், [QBR] என்னுடைய கை அவர்களை அழிக்கும் என்று எதிரி சொன்னான். [QBR]
நீர் மீட்டுக்கொண்ட இந்த மக்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர்; [QBR] உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திற்கு நேராக அவர்களை உமது பெலத்தினால் வழிநடத்தினீர். [QBR]
பார்வோனின் குதிரைகள் அவனுடைய இரதங்களோடும் [QBR] குதிரைவீரர்களோடும் கடலில் நுழைந்தது; [QBR] யெகோவா கடலின் தண்ணீரை அவர்கள்மேல் திரும்பச்செய்தார்; [QBR] இஸ்ரவேலர்களோ கடலின் நடுவே காய்ந்த நிலத்திலே நடந்துபோனார்கள்” என்று பாடினார்கள்.
{மிரியாம் பாடின பாடல்} [PS] ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன்னுடைய கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள்; எல்லாப் பெண்களும் தம்புருக்களோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்.
{மாரா மற்றும் ஏலீமின் தண்ணீர்கள்} [PS] பின்பு மோசே இஸ்ரவேல் மக்களைச் செங்கடலிலிருந்து பயணமாக நடத்தினான். அவர்கள் சூர் வனாந்திரத்திற்குப் புறப்பட்டுப்போய், மூன்று நாட்கள் வனாந்திரத்தில் தண்ணீர் கிடைக்காமல் நடந்தார்கள்.
அவர்கள் மாராவிற்கு [* கசப்பு] வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாக இருந்ததால் அதைக் குடிக்க அவர்களுக்கு முடியாமல் இருந்தது; அதினால் அந்த இடத்திற்கு மாரா என்று பெயரிடப்பட்டது.
மோசே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டான்; அப்பொழுது யெகோவா மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்; அதை அவன் தண்ணீரில் போட்டவுடன், அது இனிமையான தண்ணீரானது. அவர் அங்கே அவர்களுக்கு ஒரு கட்டளையையும், ஒரு நீதிநெறிகளையும் கட்டளையிட்டு, அங்கே அவர்களைச் சோதித்து:
நீ உன்னுடைய தேவனாகிய யெகோவாவின் சத்தத்தைக் கவனமாகக் கேட்டு, அவருடைய பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவருடைய கட்டளைகளுக்குக் கவனித்து, அவருடைய கட்டளைகள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியர்களுக்கு வரச்செய்த வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரச்செய்யாதிருப்பேன்; நானே உன்னை குணப்படுத்தும் யெகோவா” என்றார். [PE][PS]