Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

2 Samuel Chapters

2 Samuel 22 Verses

1 {தாவீதின் துதிப் பாடல்} [PS] யெகோவா தாவீதை அவனுடைய எல்லா எதிரிகளின் கைக்கும், சவுலின் கைக்கும், விலக்கி விடுவித்தபோது, அவன் யெகோவாவுக்கு முன்பாகப் பாடின பாட்டு: [QBR]
2 “யெகோவா என்னுடைய கன்மலையும், [QBR] என்னுடைய கோட்டையும், [QBR] என்னுடைய இரட்சகருமானவர். [QBR]
3 தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையும், [QBR] என்னுடைய கேடகமும், என்னுடைய பாதுகாப்பின் கொம்பும், [QBR] என்னுடைய உயர்ந்த அடைக்கலமும், [QBR] என்னுடைய இருப்பிடமும், [QBR] என்னுடைய இரட்சகருமானவர்; [QBR] என்னைத் துன்பத்திற்கு விலக்கி இரட்சிக்கிறவர் அவரே. [QBR]
4 துதிக்குக் காரணரான யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவேன்; [QBR] அதனால் என்னுடைய எதிரிகளுக்கு விலக்கி இரட்சிக்கப்படுவேன். [QBR]
5 மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு, [QBR] பயனற்ற வெள்ளப்பெருக்கு என்னைப் பயப்படுத்தினது. [QBR]
6 பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்து கொண்டது; [QBR] மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது. [QBR]
7 எனக்கு உண்டான நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு, [QBR] என்னுடைய தேவனை நோக்கிக் கூப்பிட்டேன்; [QBR] தமது ஆலயத்திலிருந்து என்னுடைய சத்தத்தைக் கேட்டார்; [QBR] என்னுடைய கூப்பிடுதல் அவர் செவிகளில் விழுந்தது. [QBR]
8 அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது; [QBR] அவர் கோபங்கொண்டதால் வானத்தின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது. [QBR]
9 அவர் நாசியிலிருந்து புகை வந்தது, [QBR] அவர் வாயிலிருந்து ஒளிவீசும் அக்கினி புறப்பட்டது, [QBR] அதனால் தீப்பற்றிக்கொண்டது. [QBR]
10 வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது. [QBR]
11 கேருபீனின்மேல் ஏறி வேகமாகப் பறந்து சென்றார். [QBR] காற்றின் இறக்கைகளின்மேல் காட்சியளித்தார். [QBR]
12 வானத்து மேகங்களில் கூடிய தண்ணீர்களின் இருளைத் தம்மைச் சுற்றிலும் இருக்கும் கூடாரமாக்கினார். [QBR]
13 அவருக்கு முன்பாக இருந்த மின்னலினால் நெருப்புத்தழலும் எரிந்தது. [QBR]
14 யெகோவா வானத்திலிருந்து இடியைப்போல முழங்கி, [QBR] சர்வவல்லமையுள்ள தேவன் தமது சத்தத்தைத் தொனிக்கச் செய்தார். [QBR]
15 அவர் அம்புகளை எய்து, [QBR] அவர்களைச் சிதறடித்து, [QBR] மின்னல்களை உபயோகித்து, [QBR] அவர்களைச் சிதறடித்தார். [QBR]
16 யெகோவாவுடைய கடிந்துகொள்ளுதலினாலும், அவருடைய நாசியின் சுவாசக் காற்றினாலும் சமுத்திரத்தின் மதகுகள் திறக்கப்பட்டு, [QBR] பூமியின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது. [QBR]
17 உயரத்திலிருந்து அவர் கை நீட்டி, [QBR] என்னைப் பிடித்து, வெள்ளப்பெருக்கில் இருக்கிற என்னைத் தூக்கிவிட்டார். [QBR]
18 என்னைவிட பெலவானாக இருந்த [QBR] என்னுடைய எதிரிக்கும் என்னுடைய விரோதிகளுக்கும் என்னை விடுவித்தார். [QBR]
19 என்னுடைய ஆபத்து நாளிலே எனக்கு எதிராக வந்தார்கள்; [QBR] யெகோவாவோ எனக்கு ஆதரவாக இருந்தார். [QBR]
20 என்மேல் அவர் பிரியமாக இருந்தபடியால், [QBR] என்னைத் தப்புவித்தார். [* விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து] [QBR]
21 யெகோவா என்னுடைய நீதிக்குத்தகுந்தபடி எனக்கு பதில் அளித்தார்; [QBR] என்னுடைய கைகளின் சுத்தத்திற்குத்தகுந்தபடி [QBR] எனக்குச் சரிக்கட்டினார். [QBR]
22 யெகோவாவுடைய வழிகளைக் காத்துக்கொண்டுவந்தேன்; [QBR] நான் என்னுடைய தேவனுக்குத் துரோகம் செய்ததில்லை. [QBR]
23 அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; [QBR] நான் அவருடைய கட்டளைகளைவிட்டு விலகாமல், [QBR]
24 அவருக்கு முன்பாக மன உண்மையாக இருந்து, [QBR] பாவத்திற்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன். [QBR]
25 ஆகையால் யெகோவா என்னுடைய நீதிக்குத் தகுந்தபடியும், [QBR] தம்முடைய கண்களுக்கு முன்பாக இருக்கிற என்னுடைய சுத்தத்திற்குத்தகுந்தபடியும் எனக்கு பலனளித்தார். [QBR]
26 தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், [QBR] உத்தமனுக்கு நீர் உத்தமராகவும், [QBR]
27 புனிதனுக்கு நீர் புனிதராகவும், [QBR] மாறுபாடு உள்ளவர்களுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர். [QBR]
28 சிறுமைப்பட்ட மக்களை இரட்சிப்பீர்; [QBR] பெருமையுள்ளவர்களைத் தாழ்த்த, [QBR] உம்முடைய கண்கள் அவர்களுக்கு விரோதமாகத் திருப்பப்பட்டிருக்கிறது. [QBR]
29 கர்த்தராகிய தேவரீர் என்னுடைய விளக்காக இருக்கிறீர்; [QBR] யெகோவா என்னுடைய இருளை வெளிச்சமாக்குகிறவர். [QBR]
30 உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன் [† மிதிப்பேன்] ; [QBR] என்னுடைய தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன். [QBR]
31 தேவனுடைய வழி உத்தமமானது; [QBR] யெகோவாவுடைய வசனம் சுத்தமானது; [QBR] தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாக இருக்கிறார். [QBR]
32 யெகோவாவைத் தவிர தேவன் யார்? [QBR] நம்முடைய தேவனையன்றி கன்மலையும் யார்? [QBR]
33 தேவன் எனக்குப் பெலத்த அரணானவர்; [QBR] அவர் என்னுடைய வழியைச் செவ்வைப்படுத்துகிறவர். [QBR]
34 அவர் என்னுடைய கால்களை மான்களுடைய கால்களைப்போல மாற்றி, [QBR] உயர்ந்த மலைகளில் என்னை நிறுத்துகிறார். [QBR]
35 வெண்கல வில்லும் என்னுடைய கரங்களால் வளையும்படி, [QBR] என்னுடைய கைகளை யுத்தத்திற்குப். [QBR]
36 உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; [QBR] உம்முடைய தயவு என்னைப் பெரியவனாக்கும். [QBR]
37 என்னுடைய கால்கள் வழுக்காதபடி நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர். [QBR]
38 என்னுடைய எதிரிகளைப் பின்தொடர்ந்து அவர்களை அழிப்பேன்; [QBR] அவர்களை அழிக்கும்வரைக்கும் திரும்பமாட்டேன். [QBR]
39 அவர்கள் எழுந்திருக்கமுடியாதபடி என்னுடைய பாதங்களின்கீழ் விழுந்தார்கள்; [QBR] அவர்களை முறியடித்து வெட்டினேன். [QBR]
40 யுத்தத்திற்கு நீர் என்னை பெலத்தால் இடைகட்டி, [QBR] என்மேல் எழும்பினவர்களை என்கீழ் விழும்படிச் செய்தீர். [QBR]
41 நான் என்னுடைய விரோதியை அழிக்கும்படி, [QBR] என்னுடைய எதிரிகளின் பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தீர். [QBR]
42 அவர்கள் நோக்கிப் பார்க்கிறார்கள், [QBR] அவர்களை இரட்சிப்பவர்கள் ஒருவருமில்லை; [QBR] யெகோவாவை நோக்கிப் பார்க்கிறார்கள், [QBR] அவர்களுக்கு அவர் பதில் கொடுக்கிறதில்லை. [QBR]
43 அவர்களை பூமியின் தூளாக இடித்து, [QBR] தெருக்களின் சேற்றைப்போல அவர்களை மிதித்து சிதறச்செய்கிறேன். [QBR]
44 என்னுடைய மக்களின் சண்டைகளுக்கு நீர் என்னை விலக்கிவிட்டு, [QBR] தேசங்களுக்கு என்னைத் தலைவனாக வைக்கிறீர்; [QBR] நான் அறியாத மக்கள் என்னைப் பணிகிறார்கள். [QBR]
45 அந்நியர்கள் எனக்கு எதிராகப் பேசி அடங்கி, [QBR] என்னுடைய சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள். [QBR]
46 அந்நியர்கள் பயந்துபோய், [QBR] தங்கள் கோட்டைகளிலிருந்து பயத்தோடு புறப்படுகிறார்கள். [QBR]
47 யெகோவா ஜீவனுள்ளவர்; என்னுடைய கன்மலையானவர் ஸ்தோத்தரிக்கப்படுவாராக; [QBR] என்னுடைய இரட்சிப்பின் கன்மலையான தேவன் உயர்ந்திருப்பாராக. [QBR]
48 அவர் எனக்காகப் பழிக்குப் பழி வாங்கி, [QBR] மக்களை எனக்குக் [QBR] கீழ்ப்படுத்துகிற தேவனானவர். [QBR]
49 அவரே என்னுடைய எதிரிகளுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; [QBR] எனக்கு விரோதமாக எழும்புகிறவர்கள்மேல் [QBR] என்னை உயர்த்திக் கொடுமையான மனிதனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர். [QBR]
50 இதனால் யெகோவாவே, [QBR] தேசங்களுக்குள் உம்மைத் துதித்து, [QBR] உம்முடைய நாமத்திற்கு துதிப் பாடல்கள் பாடுவேன். [QBR]
51 தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு [QBR] மகத்தான இரட்சிப்பை அளித்து, [QBR] தாம் அபிஷேகம்செய்த தாவீதுக்கும் [QBR] அவனுடைய சந்ததிக்கும் என்றென்றும் கிருபை செய்கிறார்.” [PE]
×

Alert

×