அம்மனிதன் பிறரைக் குறித்துத் தீமை கூறான். அம்மனிதன் அயலானுக்குத் தீங்கு செய்யான். அம்மனிதன் அவன் குடும்பத்தைக் குறித்து வெட்கம் தரும் மொழிகளைச் சொல்லான்.
அவன் கடன் கொடுத்தால், வட்டி கேளான். குற்றமற்ற மனிதருக்குத் தீங்கிழைப்பதற்கு அவன் பணம் பெறான். அந்த நல்ல மனிதனைப்போல வாழும் ஒருவன் எப்போதும் நீங்காது தேவனுடைய அருகே இருப்பான்.