அவர் எனது தேவன். நான் பாதுகாப்பைத் தேடி ஓடும் கன்மலை. தேவன் எனது கேடயம். அவரது ஆற்றல் என்னைக் காக்கிறது. மலைகளின் உச்சியில் நான் மறைந்துக் கொள்ள ஏதுவான என் பாதுகாப்பிடம் கர்த் தர் ஆவார். கொடிய பகைவரிடமிருந்து அவர் என்னைக் காக்கிறார்.
என் பகைவர்கள் என்னைக் கொல்ல முயற்சித்துக்கொண்டிருந்தனர்! மரணத்தின் அலைகள் என்னைச் சூழ்ந்தன. மரணத்தை நோக்கி இழுத்துச் செல்லும் வெள்ளத்தில் நான் அகப்பட்டேன்.
மாட்டிக்கொண்ட நான் கர்த்தரிடம் உதவிக் கேட்டேன். ஆம், எனது தேவனை அழைத்தேன். தேவன் தமது ஆலயத்தில் இருந்தார். என் குரலைக் கேட்டார். அவர் என் அழுகையைக் கேட்டார்.
கர்த்தாவே நீர் பலமாகப் பேசினீர். பலமுள்ள காற்று உங்கள் வாயிலிருந்து அடித்தது. தண்ணீர் விலகிற்று. எங்களால் கடலின் அடிப்பாகத்தைப் பார்க்கமுடிந்தது. பூமியின் அடித்தளத்தையும் எங்களால் பார்க்க முடிந்தது.
எனவே கர்த்தர் எனக்கு வெகுமதியைத் தருவார்! ஏனெனில் சரியானதையே நான் செய்தேன்! அவர் எதிர்பார்ப்பதையே நான் செய்கிறேன். நான் தவறு செய்யவில்லை. எனவே அவர் எனக்கு நலமானதைச் செய்வார்.
கர்த்தாவே, யார் நல்லவராகவும் பரிசுத்தமான வராகவும் இருக்கிறார்களோ, அவர்களுக்கு நீர் நல்லவராகவும், பரிசுத்தமானவராகவும் இருக்கிறீர். உம்மிடம் மாறுபாடு உள்ளவர்களுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் நடந்துகொள்வீர்.
என் பகைவர்கள் உதவிக்கு ஆள் தேடினார்கள். ஆனால் யாரும் அவர்கள் உதவிக்கு வரவில்லை. அவர்கள் கர்த்தரிடம் கூட கேட்டார்கள். ஆனால் அவர் அவர்களுக்குப் பதில் அளிக்கவில்லை.
என் பகைவர்களைத் துண்டு துண்டாக்கினேன். அவர்கள் நிலத்தின் மீது புழுதியானார்கள். என் பகைவர்களை நான் சிதறடித்தேன். அவர்கள் மீது தெருப்புழுதியென நினைத்து நடந்தேன்.
நீர் எனக்கு எதிராக போரிட்டவரிடமிருந்து என்னைக் காத்தீர். நீர் அந்தத் தேசங்களை ஆள்பவனாக என்னை ஆக்கினீர். எனக்குத் தெரியாதவர்கள் இப்போது எனக்குப் பணி செய்கிறார்கள்!
45பிற தேசத்தவர் எனக்கு கீழ்ப்படிகின்றார்கள்! என்னுடைய கட்டளையைக் கேட்கும்போது விரைந்து பணிவிடை செய்கிறார்கள், அயல் நாட்டவர்கள் எனக்குப் பயப்படுகிறார்கள்!
கர்த்தர், தன் அரசன் போரில் வெல்லும்படி செய்கிறார்! கர்த்தர் தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனுக்கு உண்மையான அன்பைக் காட்டுகிறார். அவர் தாவீதுக்கும் அவன் சந்ததிகளுக்கும் எப்போதும் உண்மையாக இருப்பார்!